search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eid"

    • புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகும்.
    • ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், இவரது புதிய படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

    அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை நாளான (ஏப்ரல் 11) இன்று சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் கூடினர். ஒரே சமயத்தில் ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் ஒன்று கூடியதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், காவலர்களால் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலைந்து போக வலியுறுத்தினர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடிகருக்கு வாழ்த்து தெரிவிக்க கூடிய ரசிகர்கள் மீது தடியடி நடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சல்மான் கான் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்திற்கு "சிக்கந்தர்" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.



    பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வாகா - அட்டாரி எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். #EidMubarak #EidAlAdha #Pakistan #India
    சண்டிகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
    கடந்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்கள் கூறிக்கொண்டனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    புதுடெல்லி:

    ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம்.
    ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும்.

    ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை  முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.

    மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.

    இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

    ஸகாத் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையான தர்மமாகும். இஸ்லாத்தில் மூன்றாவது தூணாக ஸகாத் கருதப்படுகிறது. ஸகாத் என்றால் தூய்மையடைதல் என்ற பொருளையும் தருகிறது. இது உளத்தூய்மையைக் குறிக்கிறது. பொருளீட்டும் நபருக்கு அந்தப் பொருளின் மீதான காதலை முறியடித்து, தன் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தானமாகக் கொடுத்து அதில் கிடைக்கும் மனநிறைவை ஏற்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.


    “அல்லாஹ் வட்டியை (அதில் எந்தப் பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; தன் கட்டளையை நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்ற திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 276-வது வசனம் வட்டியால் அழிவும், தர்மத்தால் நன்மையும் ஏற்படும் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

    ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.

    ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.
    தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Ramadan #Eid
    சென்னை:

    தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. எனினும், பிறை தெரிவதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ×