search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து
    X

    நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரம்ஜான் வாழ்த்து

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    புதுடெல்லி:

    ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    Next Story
    ×