search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sweet exchange"

    பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வாகா - அட்டாரி எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். #EidMubarak #EidAlAdha #Pakistan #India
    சண்டிகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
    கடந்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்கள் கூறிக்கொண்டனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    ×