search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீரட்"

    டெல்லி கண்டோன்மென்ட் எல்லைக்குட்பட்ட சாலையில் நேற்று ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ மேஜர் நிகில் ஹண்டா கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested
    லக்னோ:

    டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் நேற்று கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிரேதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.

    இந்த மர்ம கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க சைலஜா விவேடி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அதிகாரியின் மனைவி என்பதும், நேற்று காலை சுமார் 10 மணியளவில் இங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்ற அரை மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.



    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராணுவ மேஜரின் மனைவி கொலை வழக்கில் நிகில் ஹண்டா என்ற சக ராணுவ மேஜர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். #ArmyMajorwifekilled #MajorArrested

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக தர வலியுறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் டி.பி. நகரை சேர்ந்த விகாஸ்குமார். இவரது மனைவி அனு.

    விகாஸ் குமாரின் சகோதரிக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.

    இதற்காக விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுவிடம் கிட்னியை தானமாக கொடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கு அனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் விகாஸ் குமார், அனுவின் பெற்றோருக்கு போன் செய்து தங்களது மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுவின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் விகாஸ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. அனுவின் உடலும் அங்கு இல்லை. அவரது உடலுடன் கணவர் விகாஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அனுவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில், கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக கொடுக்க அனுவை வற்புறுத்தி கொடுமை படுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×