என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NirmalaSitharaman"

    • பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் பேசக்கூடிய ஒரு அமைச்சராக ஜி.எஸ்.டி. வரி பற்றி மக்களுக்கு விளக்கும் பணியை எனக்கு வழங்கி என்னை பிரதமர் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார்.

    அப்போது மேடையில் நான் பேசியபோது விக்கிரம ராஜா இருந்தார். இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும், மக்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்று அப்போது விக்கிரமராஜா எடுத்து சொன்னார்.

    அவர் எடுத்து சொன்னதால் திரும்பவும் நான் சென்று அறிக்கை கொடுத்து என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலமாக முன்னேற்றம் ஏற்படுத்திக் கொண்டே வந்தோம். அதற்காக விக்கிரமராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    5, 12, 18, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. இப்போது 5, 18 என்கிற 2 வகைகளுக்கு வந்துவிட்டது. காலையில் எழுந்ததும் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்து இரவு தூங்குவதற்கு முன்பு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வரை ஏழை, நடுத்தர வர்க்கம், பணம் இருக்கின்றவர்கள் எல்லோரும் பயன்படுத்தக் கூடிய எந்த வகையான பொருளாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. தாக்கம் இருக்கும்.

    அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது 28 சதவீதமாக இருக்குமா? 18 சதவீதமாக இருக்குமா? என்கிற காலம் போய் இன்றைக்கு 5 அல்லது 18 சதவீதத்துக்குள் எல்லாப் பொருட்களும் வந்து விடுகிறது என்பதுதான் முக்கியமான அம்சம்.

    12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவீதத்துக்கு வந்துள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த சில பொருட்களுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    அதே போல் ஏற்கனவே 18 சதவீதத்தில் இருந்த 90-க்கும் மேற்பட்ட பொருட்கள் 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சில பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு வந்துள்ளதால் எவ்வளவு விலையை குறைத்துள்ளோம் என்பதை பாருங்கள்.

    12-ல்இருந்து 5 சதவீதத்துக்கு வந்ததே குறைவுதான். அதிலும் 18-ல் இருந்து 5 சதவீதத்துக்கு வந்தது எப்பேர்பட்ட குறைச்சல் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.

    எப்போதும் நமது மீது அரசு வரி விதிக்கிறது, பளுவை ஏற்றுகிறது என்ற நிலை போய் இன்று பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத் துள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து சில பொருட்கள் வரி நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் 140 கோடி மக்களுக்கு பலவிதமான பொருட்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம், அரை சதவீதம் அல்ல, கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை குறைத்து உள்ளோம்.

    பல பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனுடைய தாக்கம் 140 கோடி மக்கள் மீதும் இருக்கும். இது நல்ல தாக்கம்தான். விலை குறைகிறது. விலை குறைந்தால் வீட்டில் நமக்கு செலவு மிச்சமாகும். அதை நீங்கள் எந்த வகையிலாவது உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதோ, பெரிய வர்களுக்கு செலவு செய் வதோ அல்லது சேமிப்பாக வைப்பதோ உங்கள் கையில் இருக்கிறது.

    பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து இதை தீபாவளிக்கு முன்பு குறைத்து விடுங்கள் என்றார். தீபாவளிக்கு முன்பு கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கும்போது தென்னிந்தியாவில் நாம் அனைவருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் துணி எடுப்பது, பலவிதமான பொருட்கள் வாங்குவது போன்ற பழக்கம் இருக்கிறது.

    வடஇந்தியாவிலும் செய்வார்கள். ஆனால் வடக்கோ, குஜராத்தோ, மராட்டியமோ அல்லது துர்கா பூஜை நேரத்தில் மேற்கு வங்காளத்திலோ கூட நீங்கள் யோசித்து பார்த்தால் தீபாவளிக்கு முன்பே நவராத்திரி கால கட்டத்தில் வீட்டுக்கு நிறைய சாமான்கள் வாங்குவதோ அல்லது பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்குவதையோ செய்வார்கள்.

    தீபாவளியை மனதில் வைத்து பிரதமர் சொன்னார் என்றால் கூட எல்லா மாநிலத்தினரும் அமர்ந்தி ருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அவரவர்களுக்கு அவரவர்களின் பண்டிகையை மனதில் வைத்து நவராத்திரிக்கு முன்பே செய்து விட வேண்டும் என்பதால் முன்கூட்டியே செய்துவிட்டோம்.

    நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. அவர்கள் பல முறை கோரிக்கை வைத்தால் கூட இன்றைக்கு ஒரேயடியாக எல்லா கட்டமைப்புகளையும் மாற்றி விட்டு தொழில் செய்பவர்களுக் கும், வணிகத்தில் இருப்பவர் களுக்கும் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எளிமைப்படுத்தி வரியையும் குறைத்து உள்ளோம். இதனால் எல்லா மக்களுக்கும் பயன் இருக்கி றது.

    12 சதவீதத்தில் இதுவரை இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ளது. 1 சதவீதம் மட்டுமே 18 சதவீதத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

    ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத் தப்பட்டபோது 65 லட்சம் பேர்தான் வரி கட்டினார்கள். அதில் தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் அடங்குவர். ஆனால் இன்று ஜி.எஸ்.டி. வரியை 8 வருடத்தில் 1½ கோடி பேர் கட்டுகி றார்கள்.

    ஜி.எஸ்.டி. ஒரு பெரிய கப்பர்சிங் வரி என்று எதிர்க்கட்சி தலைவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அது கப்பர் சிங் வரியாக இருந்திருந்தால் தொழிலோ, வர்த்த கமோ 65 லட்சத்தில் இருந்த வர்கள் ஏன் 1½ கோடி பேர் ஜி.எஸ்.டி.யில் சேர்ந்தார்கள். அது சுலபமாக இருக்கிறது.

    எங்கு பொருள் வாங்கினாலும் அதே விலையில் கிடைக்கிறது. பொருள் வாங்கி அதை இன்னும் முன்னேற்றம் அடைய செய்து ஏற்றுமதிக்கு கூட பயன்படுத்துகிறீர்கள். அதனால் நுகர்வோர் மட்டும் வரி கட்டவில்லை. பொருள் தயாரிப்பவர்களும் வரி கட்டுகிறார்கள்.

    ஜி.எஸ்.டி.யில் வருவதால் நமக்கு ஆதாயம் இருக்கிறது என்று சொல்லி வந்ததால் 65 லட்சத்தில் இருந்து 1½ கோடியாக கூடி இருக்கிறது.

    2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி ரூ.7.9 லட்சம் கோடி யாக வசூலானது. அது இன்று ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் ரூ.1.9 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளுக்கு 50 சதவீதமாக பிரித்துக் கொள்கிறோம்.

    ரூ.1.8 லட்சம் கோடி வருமானம் வந்தால் அது ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கும், ரூ.90 ஆயிரம் கோடி மாநில அரசுக்கும் செல்கிறது. அதன் பிறகு ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவதில் கூட கிட்டத்தட்ட 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகி றது. அதனால் 100-ல் 23 சதவீதம்தான் மத்திய அர சுக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மக்களுக் கும் பலன் கிடைத்துள்ளது. மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன் னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதா ராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார் கள். அதை நாங்கள் பொறு மையாக காதில் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை.

    ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்தி ருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்ப தையும் எடுத்து சொன்னேன்.

    அந்த நல்லதுக்கு பிரதமர் மோடி, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்ல வில்லை. சொல்லாமல் போனால் கூடஎனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.

    சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர் கள் வந்து அமர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள்.

    இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர் கள்தான் இருக்கிறார்கள். இந்த முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்த அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் எடுத்தார்கள்.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால் கெட்ட பெயர் வரும் போதோ, திட்டும் போதோ பிரதமர் மற்றும் என்னை சொல்லிக் கொண் டிருந்தவர்கள் இன்றைக்கு நல்ல இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறோம். அதிலும் மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது என்பதை நானே எடுத்து சொல்ல விரும்புகிறேன்.

    அதைத்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் நான் சொன்னேன். பத்திரி கையாளர்கள் சந்திப்பிலும் சொன்னேன். மாநிலங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய எல்லா நிதி அமைச்சர்க ளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் ஒத்துழைத்து இந்த முடிவை எடுத்தார்கள்.

    மக்கள் நலன் கோரி வரி விகிதத்தை குறைக்கும் போது அந்த நன்மை மக்க ளுக்கு போய் சேர விடாமல் தடுப்பதற்கு யாருக்கு மனதில் தைரியம் இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இதைப்பற்றி சர்ச்சை ஏற் பட்டதா? என்று பத்திரிகை யாளர்கள் என்னிடம் கேட்டனர்.

    350-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விலையை குறைத்து உள்ளோம். விலை என்றால் அதற்கான வரியை குறைத்திருக்கிறோம். 5, 18 சதவீதம் என 2 அடுக்காக குறைத்துள்ளோம். இது தவிர தொழில் செய்பவர்கள் 3 நாளில் பதிவு செய்யும் வகையில் கட்டமைப்பை சரி செய்துள்ளோம்.

    சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு ஏற்கனவே வரி கிடையாது. ஆனால் தொழிற்சாலையில் தயாரித்த பாப்கார்னை உப்பு போட்டும், சாக்லேட் போட்டும் விற்றனர். அதில் உப்பு போட்ட பாப்கார்னுக்கு 5 சதவீதமும், சாக்லேட் போட்ட பாப்கானுக்கு 18 சதவீதம் எனவும் வகைப் பாடு இருந்தது.

    இதுபற்றி ஒரு பாப்கான் விலையை நிதி மந்திரி இப்படி விளக்கி கூறுகி றாரேஎன்று விமர்சித்தனர். கிண்டல் செய்தனர். அதற் குரிய பதிலை சொல்வது எனக்கு இருந்தது. பாப்கார்னுக்கு 2 விலையா? என்று கேட்டனர். இப்போது உணவு பொருட் கள் எல்லாமே 5 சதவீதத் துக்கு வந்து விட்டது அல்லது ஜீரோவுக்கு போய் விட்டது. இப்போது வகைப்பாடு பிரச்சினையே இல்லை.

    ஜி.எஸ்.டி. வரி குறைப் பால் பொருட்களின் விலை குறையப் போகிறது. நாட் டில் ஒரு பெரிய விதமான மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலமாக வந்து உள்ளது.

    இந்த சீர்திருத்தத்தை செய்வதற்கு 5 விதமான செயல்களை மனதில் வைத்து இதை அமல்படுத்தி னோம். தினசரி பயன்படுத் தும் பொருட்களில் மாறுதல் வருமா? ஏழைகள், நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத் தும் பொருட்களை இதில் கொண்டு வருகிறோமா? விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா? சிறு-குறு தொழில் செய்பவர்கள் வாங்கும் பொருட்கள் இன்னும் குறைந்த விலை யில் கிடைக்குமா? நமது நாட்டு பொருளாதாரம் விரைவில் வளருமா? என் பதை வைத்துதான் இதை செய்தோம்.

    ஒவ்வொரு பெரிய கம்பெனிகளும் விலை குறைப்பை பொதுமக்க ளுக்கு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். எல்லா நிறுவனங்களும் பொருட் களை விலை குறைத்து மக்களுக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பிரதமர் மோடி மக்கள் நலன்கோரி இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தத்தின் ஆதா யம் மக்களுக்கு போய் சேர முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

    இந்த வரி சீர்த்திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும், எந்தெந்த பகுதிகள் பயன் அடையும் என்பதையும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

    திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் உற்பத்தி யாகும் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், கைவி னைப் பொருட்கள். காஞ்சீபுரம் பட்டு மற்றும் ஜரிகை வேலைப்பாடு, பொள்ளாச்சி காங்கேயம், கடலூர் பகுதிகளில் உற் பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள்.

    சிவகாசி, சென்னை பகுதிகளில் உற்பத்தியாகும் காகித தொழில்கள், தஞ்சா வூர் பாரம்பரிய பொம்மை கள், கும்பகோணம் உலோ கப் பொருட்கள். ஸ்ரீபெரும்பு தூர், ஓசூர், கோவை பகுதிகளில் உற்பத்தியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உள்பட தமிழ்நாட்டில் ஏராளமான பொருட்களின் விலை குறையும். இதன் மூலம் சமூக பொருளாதார அம்சங்கள் வலுப்பெறும்.

    நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் நயி னார் நாகேந்திரன் சென்னை ஐ.ஐ.டி. இயக்கு னர் காமகோடி, சி.ஐ.ஐ. சேர்மன் உன்னிகிருஷ்ணன், ஏ.இ.பி.சி. துணைத் தலைவர் சக்திவேல், எப்.ஐ.சி.சி.ஐ. சேர்மன், வேலூர் எச்.சி.சி.ஐ. தலைவர் லினேஷ் சனத்குமார், சைமா தலை வர் துரை பழனிசாமி , சென்னை குடிமக்கள் மன்ற தலைவர் கே.டி.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை குடிமக்கள் மன்ற செயலாளர் காயத்ரி, சுரேஷ் நன்றி கூறினார்.

    • மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
    • மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:

    மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.

    இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.

    மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
    • பல்வேறு தரப்பினம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இதற்கு பல்வேறு தரப்பினம் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கேரள காங்கிரசும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    கேரள காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- சீனிவாசன் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்று நேற்று முன்தினம் வெளியான வீடியோவில் கூறினார். மோடி சகிப்புத்தன்மையற்றவர். அவரது கூட்டாளிகளும் அவரைப் போலவே செயல்படுகிறார்கள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாய், மிகவும் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

    • 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
    • 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.

    பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • MSME-க்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவோம்

    பாராளுமன்றத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்நிலையில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சிறு குறு தொழில் நிறுவங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ. 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்படும். மேலும் MSME-க்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    எஸ்.சி, எஸ்.டி பிரிவை சேர்ந்த 5 லட்சம் பெண்கள், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.சிறு குறு தொழில் உற்பத்தியைப் பெருக்க தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.

    புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

    உதயம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். 

    ஸ்டார்ட்அப் இந்தியாவுக்கான செயல் திட்டம் ஜனவரி 16, 2016 அன்று வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், ஸ்டார்ட்அப்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 10,000 கோடி ரூபாயில் ஸ்டார்ட்அப்களுக்கான நிதி (FFS) திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதன் நிதிக்கு மேலும் ரூ.10,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்களை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட் இது.
    • இளைஞர்களுக்காக பல துறைகளைத் திறந்துள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

    இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கிய மைல்கல். 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் இது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட் இது. இளைஞர்களுக்காக பல துறைகளைத் திறந்துள்ளோம்.

    இந்த வரவு-செலவுத் திட்டம் ஒரு சக்தியைப் பெருக்கும். இந்த பட்ஜெட் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும்.

    இந்த மக்கள் பட்ஜெட்டுக்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரையும் வாழ்த்துகிறேன்.

    பொதுவாக பட்ஜெட்டில் அரசின் கருவூலம் எப்படி நிரப்பப்படும் என்பதில்தான் கவனம் செலுத்தப்படும், ஆனால் இந்த பட்ஜெட் அதற்கு நேர்மாறானது.

    இந்த பட்ஜெட், நாட்டின் குடிமக்களின் பாக்கெட்டுகளை எப்படி நிரப்பும், நாட்டு குடிமக்களின் சேமிப்பு எப்படி அதிகரிக்கும், நாட்டின் குடிமக்கள் எப்படி வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாறுவார்கள் என பறைசாற்றுகிறது.

    இந்த பட்ஜெட் இதற்கு மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட்டில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அணுசக்தி துறையில் தனியார் துறையை ஊக்குவிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது நாட்டின் வளர்ச்சியில் சிவில் அணுசக்தியின் பெரும் பங்களிப்பை உறுதிசெய்யும்.

    பட்ஜெட்டில், அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு ஒவ்வொரு வகையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.

    உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால் இந்தியாவில் பெரிய கப்பல்களின் கட்டுமானம் ஊக்குவிக்கப்படும். கப்பல் கட்டுமானம் அதிகபட்ச வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    அதேபோல், நாட்டில் சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 50 முக்கிய சுற்றுலா நிலையங்களில் ஹோட்டல்கள் கட்டப்படும். முதல் முறையாக, உள்கட்டமைப்பு வரம்பிற்குள் ஹோட்டல்களை கொண்டு வருவதன் மூலம் சுற்றுலாவுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். இது மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்கு ஆற்றலைக் கொடுக்கும்.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவசாயத் துறையிலும், ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடித்தளமாக அமையும். கிசான் கிரெடிட் கார்டு வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டு, அவர்களுக்கு மேலும் உதவும் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
    புது டெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.



    இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து  திட்டம் தீட்டி வருகின்றனர்.

    அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan

    பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும் செய்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
    சென்னை:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக  விளக்கம் அளித்த அவர், ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும், ராணுவ ஆதரவும் அளித்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாகவே பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதைப்போல் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் மீது நாம் தாக்குதல் நடத்தினோம். இது ராணுவ நடவடிக்கை அல்ல. பாகிஸ்தான் செய்திருக்க வேண்டிய பணியை நாம் செய்து முடித்தோம். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை நமது விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம்’ என தெரிவித்தார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
    பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் எரிந்து சாம்பலான இடத்தை நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டு சேதாரங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். #NirmalaSitharaman #AeroIndia #AeroIndiafire
    பெங்களூரு:

    பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.



    இந்த விபத்துக்கான தொடர்பாக உயரதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்டு ஏற்பட்ட சேதாரங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்தார். #NirmalaSitharaman  #AeroIndia   #AeroIndiafire
    இந்திய முப்படைகளுக்காக ரூ.9,100 கோடி மதிப்பில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.9,100 கோடி மதிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
    இந்திய கடற்படையைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும் கடந்த 8 மாதங்களாக உலகை சுற்றி, இன்று கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தனர். அவர்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வரவேற்றார். #INSVTarini #WelcomeHomeTarini #NirmalaSitharaman
    பனாஜி:

    இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இம்முறை கடற்படை பெண்கள் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வரும் பயணத்தை தொடங்கினர்.

    பெண் வீராங்கனைகள் மட்டும் கொண்ட இந்த குழுவானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள் பயணத்தை தொடங்கியது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கொடியசைத்து அதனை தொடங்கி வைத்தார்.


    6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மாரிடியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 ஆண்டுகளில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

    லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி , ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 5 பெண்கள் மட்டும் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.


    இந்நிலையில், தங்கள் உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று தாயகம் திரும்பிய தாரிணி குழுவினரை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வரவேற்றார். #INSVTarini #WelcomeHomeTarini #NirmalaSitharaman
    ×