search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revenge"

    • வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
    • அம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற அப்பாச் பிரகாஷ்.

    இவர் மீது கொலை, வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் கோபாலன்கடை அருகே உள்ள அம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அம்மா நகர் ராஜாவின் கொலைக்கு பழி தீர்க்க சம்பவத்தன்று அப்பாச் பிரகாஷை தீர்த்துக்கட்ட ரவுடி ராஜாவின் கூட்டாளிகளான முத்துப்பிள்ளை பாளை யத்தைச்சேர்ந்த மணி என்கிற மாறு மணி, தினேஷ், பாண்டி, கணுவாப் பேட்டையை சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 9 பேர் வாழப்பட்டாம் பாளையம் சென்று ரவுடி அப்பாச் பிரகாஷை ஆயுதங்களுடன் தேடி உள்ளனர்.

    அப்போது அவர் இல்லாததால் அவரது உறவினரான மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் சக்திவேல் மகன் பிரதாப் (வயது 22) என்பவரை வழிமறித்து அப்பாச் பிரகாஷ் குறித்து தகவலை கேட்டுள்ளனர். அவர், 'எதுவும் தெரியாது நான் டீக்கடை நடத்தி வருகிறேன். அப்பாச்சி பிரகாஷ் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பிரதாப் பொய் சொல்வதாக கருதிய அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியது. இதில் பிரதாப்புக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் பிரதாப் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் மாறு மணி தலைமையிலான கும்பல் பறித்து சென்றது. பலத்த காயமடைந்த பிரதாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பிரதாப்பை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மாறுபணி, தினேஷ், பாண்டி, அசாருதீன் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    • செல்வக்குமார் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.
    • குற்றவாளிகளை சிவகிரி போலீஸ் தேடி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதியன்று சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    வெட்டிக்கொலை

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் சிவகிரியில் ஒரு வக்கீலை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருடன் செல்வக்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அரசு மருத்துவமனை அருகே அவரை வழிமறித்த கும்பல் செல்வக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதில் பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்து.

    இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணமூர்த்தி தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார்.
    • தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    கடலூர்: 

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார். அதன்படி நேற்று இரவு வீட்டுக்கு வெளியே கிருஷ்ண மூர்த்தி தூங்கினார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழி யாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராள மானோர் திரண்டனர். இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ண மூர்த்தியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இவரை மர்மநபர்கள் கத்தி யால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் வாலிபர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப் பட்டுள்ளது தெரியவந்தது. எனவே பழிக்குபழியாக கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று கொலை யாளிகளின் ரேகைகளை பதிந்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தி.மு.க.வினரின் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    • அகதிகள் முகாம் கட்டுமானத்தை தடுத்த முன்னாள் கவுன்சிலர் ைகது

    கரூர்:

    கரூர் ராயனூரில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தோரணக்கல்பட்டியில் உள்ள மந்தை நிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ளது. இது கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்த பகுதியாகும். ஆட்சி மாற்றத்தால் பே ருந்து நிலையம் வருவது நின்றுப்போனது.

    இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட சமுதாய மக்களின் கோயில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமாக மந்தை நிலங்கள் அமைந்துள்ளன என எதிர்ப்புத் தெரிவித்தும், மறுவாழ்வு முகாம் அமைக்கக்கூடாது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட் டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் தோரணக்கல்பட்டி, கொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கடந்த 1ம் தேதி கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தோரணக்கல்பட்டி பகுதியில் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிக்காக பொக்லைன் மூலம் நேற்று முன்தினம் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த தடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாந்தோணிமலை போலீஸார் கரூர் நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம், சணப்பிரட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இள ங்கோவன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.

    மேலும் பாதுகாப்புக்காக தோரணக்கல்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர். சுக்காலியூரிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியினருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். 5 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறியதை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அதன்பின் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், கரூர் மாவட்ட எஸ்.பி. இ.சுந்தரவதனம் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து நிருபர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, தோரணக்கல்பட்டியில் புறம்போக்கு நிலம் 14.5 ஏக்கரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை முடக்கவேண்டும் என்பதற்காக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சணப்பிரட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோவன் தனது பட்டா நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் ஏகாம்பரம், சத்தியமூர்த்தி ஆகியோரும் வழக்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களை மிரட்டி விரட்டியுள்ளனர். நேற்று அதிகாலை வீடு புகுந்து 3 பேரையும் கைது செய்தனர். இது அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

    • வியாபாரியை கும்பல் பழிதீர்த்ததா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (வயது 37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஸ்டீபன் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேலை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சக்திவேல் நேற்று காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். மதுரையில் உள்ள சில நண்பர்களை சந்தித்து பேசிய சக்திவேல் பின்னர் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்துக்கு புறப்பட்டார். செக்கானூரணி-மேலக்கால் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் அவரை வழிமறித்தது. அதில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இயங்கிய 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சிவபாலன் (சோழவந்தான்), சங்கர் கண்ணன் (அலங்காநல்லூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    ஜாமீனில் வெளிவந்த சக்திவேல், ஜவுளி வியாபாரி ஸ்டீபன் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    கொலையான சக்திவேல் கடந்த 2020-ம் ஆண்டு மேல உரப்பனூரைச் சேர்ந்த பால் வியாபாரி மணிகண்டன் என்பவரையும் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய அட்டாக் பிரகாஷ் என்ற ரவுடியை மர்ம கும்பல் கழுத்தறுத்து கொலை செய்தது. எனவே அதே கும்பல் தான் சக்திவேலையும் கொலை செய்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



    இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

    நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
    ×