என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழிக்குப்பழி"

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல்-சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 10-ந்தேதி இவர் பரமத்திரோடு காவேட்டிப்பட்டியில் உள்ள ஒரு லாரி பட்டறை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அவரது மகன் சுரேஷ்(26) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த போதுப்பட்டி காலனியை சேர்ந்த குட்டி என்கிற தமிழ் செல்வன்(39), அவரது நண்பர்கள் லட்சுமி நகரை சேர்ந்த குமார் என்கிற ஜெயக்குமார்(42), போதுப்பட்டி காலனியை சேர்ந்த வினோத்குமார்(32) மற்றும் மாரிகங்காணி தெருவை சேர்ந்த முருகேந்திரன்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய ஜெயலிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    குட்டி என்கிற தமிழ்செல்வனின் தந்தை அன்பழகனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லுசாமி, பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். இதற்காக நல்லுசாமி சிறை தண்டணை அனுபவித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் வந்துவிட்டார். கரூரில் தங்கி இருந்து மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தாதம்பட்டியில் குடியிருக்கும் தனது மகன் சுரேசை பார்க்க அவ்வப்போது நல்லுசாமி நாமக்கல் வந்து செல்வது வழக்கம். தனது தந்தையை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கத்திட்டமிட்ட குட்டி, தனது நண்பர் குமாரிடம் நல்லுசாமி நாமக்கல் வரும்போது தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தான் சம்பவத்தன்று நாமக்கல்- போதுப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்த நல்லுசாமியை பார்த்த குமார், உடனே குட்டியை அங்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து நல்லுசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

    பின்னர் குட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து நல்லுசாமியை பரமத்திரோட்டில் உள்ள லாரி பட்டறைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட குட்டி மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை அன்பழகன் கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×