search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankulam"

    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி ராஜீவ்காந்தி நகரில் கடந்த மாதம் 28-ந் தேதி பள்ளி மாணவனான பூனிஷ்(வயது 9) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

    கலெக்டர் திடீர் ஆய்வு

    இந்நிலையில் தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் தாலுகா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்குள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி 7 ஆண்டுகளாகியும் இங்கு அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், மகப்பேறு வசதி, செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    டெங்கு தடுப்பு பணி

    அப்போது கலெக்டர் ரவிச்சந்திரன், விரைவில் மருத்துவமனையை தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி, ஓடை மரிச்சான் கிராமங்களுக்கு சென்ற அவர் தெருக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து உடை யாம்புளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தினை பரிசோதனை செய்தார்.மேலும் மருதம் புத்தூர் கிராமத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள் மற்றும் புதிய பஞ்சாயத்து அலுவலகத்தைத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், நிஷாந்த் குமார்,செயற்பொறியாளர் மற்றும் மருதம் புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை, பஞ்சாயத்து செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.

    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
    • பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    தொடர்மழை காரணமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    காய்ச்சல்

    சமீபத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் முற்றியதில் மூளைக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்தவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து இவ்வட்டாரத்தில் சுகாதாரத்துறை ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், 5 நாள் தொடர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையை நாடினால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும், சில நேரத்தில் பணியாளர்களே சிகிச்சை மேற்கொள்கின்றனர் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கோரிக்கை

    மழை நீடிப்பதால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பேரூராட்சி ஊழியர்கள் தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

    எனவே தண்ணீரை நாள் கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொட்டிகளை 6 நாட்களுக்கு ஒரு முறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


    இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,

    பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.

    • முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் ஆகியோரின் அறிவு ரைப்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி வரவேற்றார். நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    அதனை தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான் சுபாஷ் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    முகாமில் நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், நெட்டூர் ராமசெல்வம், கீழக்கலங்கல் கவிநிலவன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மகேஷ், தினேஷ், உதவியாளர்கள் கீதா, பிச்சையா மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் பெற்றனர்.

    ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜுலியட் நன்றி கூறினார்.

    • ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை தொட ங்கியது.
    • காவடி வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பறவை காவடியுடன் வலம் வந்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை தொட ங்கியது. இதையொட்டி குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், 501 விளக்குப் பூஜை, சாஸ்தா பிறப்பு நிகழ்ச்சி மற்றும் கடையநல்லூர் தொப்பை பெருமாள் குழுவினரின் வில்லிசை, பரமகுடி சுந்தர் குழுவினரின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

    2-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு நெட்டூர் அப்ரானந்த சுவாமி கோவிலிலிருந்து பறவை காவடி எடுத்து வரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலிலிருந்து புறப்பட்ட பறவை காவடி, சாலை மார்க்கமாக பிரதான சாலை வழியாக வந்து கோவிலை அடைந்தது. இதையடுத்து அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காவடி வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பறவை காவடியுடன் வலம் வந்தனர். மேலும், வழி நெடுகிலும் பக்தர்கள் பறவை காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தல், ஊர் விளையாட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதல், தொடர்ந்து சாம பூஜை ஆகியவை நடைபெற்றன.

    3-ம் நாள் திருநாளான புதன்கிழமையான இன்று காலை 8 மணிக்கு முளைப்பாரி கரைத்தல், தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.
    • முகாமில்அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.

    உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம், விதை ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் பேசினர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டாரத்தில் தங்கி வேளாண் குறித்து அறிய வந்திருக்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் லக்ஸயாஸ்ரீ, கவிதா ஆகியோர் வெர்டிசிலியம் லெக்கானி பயன்பாடு குறித்து விவரித்தனர்.

    முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    காமராஜர் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில கலை இலக்கிய அணி துணைத் தலைவர் ஆலடி சங்கரையா, ஆலங்குளம் தெற்கு வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், தென்காசி மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர பொதுச் செயலாளர் அருமைநாயகம், ஆலங்குளம் தொகுதி ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். தலைவர் ஏசுராஜா, நகரப் பொருளாளர் பிரதாப், வேல்குமார் ராமசாமி, செல்லக்கனி, செல்லக்கிளி, மாடக்கண், செல்வம், வேலாயுதம், சுந்தரம், பொன்னுத்துரை, குருவன்கோட்டை கிருஷ்ணன், மாரியப்பன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல் நன்றி கூறினார்.

    • ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ்(வயது 34) என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட செல்வராஜ் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. இவர் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
    • இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
    • ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    ரூ.15 லட்சம் கொள்ளை

    புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.

    மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.

    2 தனிப்படைகள் அமைப்பு

    இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    • தொடக்க விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார்.
    • புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம்அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி தொடக்க விழா நடந்தது.

    பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முக ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டியில் இருந்து காமராஜ் நகருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் தொழிலதிபர் மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலவிநாயகம், துணைத் தலைவர் வேல் துரை, ஓடைமறிச்சான் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் சங்கீதா, இயேசுராஜன், சிவலார்குளம் முத்தையா, மருதம்புத்தூர் கிளை செயலாளர் அருணாச்சலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81).
    • இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81). இவர் நேற்று அவரது ஊரில் இருந்து ரெட்டியார்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, அய்யாதேவர் சென்ற மொபட்டின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யாதேவர் சம்பவ இடத்திலலேயே இறந்தார்.

    இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

    ×