என் மலர்
நீங்கள் தேடியது "collector inspection"
- அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
- மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தலைமை யாசி ரியர்களுக்கு மாவட்ட கலெ க்டர் பழனி உத்தரவு. இதுகுறித்து அவர் கூறுகையில்:-
விழுப்புரம் மாவட்ட த்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட வைகள் தூய்மையாகவும், மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும். பள்ளியில் பழுதான கட்டிடத்தில் மாணவ ர்களை அமரச் செய்யாமல் கட்டாயம் தடுப்பு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செய்ய வேண்டும்.
அனைத்து நிலை களிலும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கு ம்பொருட்டு (சரிபார்ப்பு பட்டியலைக் கொண்டு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லரின் தலைமையில் 154 அலுவலர்களைக் கொண்ட குழுவினர் 1,492 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருகின்ற ஜுன்1-ம் தேதி முதல் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு முன் அனைத்துப் பள்ளித் தலைமை யாசிரியர்களும் மேற்கண்ட பராமரிப்பு பணிகளை முடித்து பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
- உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டும் பணியையும், அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தும்பனம்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் மயானம் கட்டிடம் மற்றும் காத்திருப்போர் வளாகம், சுற்று சுவர் அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிநடைபெறுவதையும், புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணியையும், சணவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணியை யும், கற்காத்தகுடி ஊராட்சி யில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தும்பனம்காகோட்டை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வை யிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கூடுதலாக குடிநீர் வசதி ெசய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதல் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, செல்லம்மாள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பொறியாளர் திலீபன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் கேட்டறிந்தார்.
- விவசாயிகள் நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்ப ட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார். பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) சண்முகம் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உதவிய இயக்குனர் தோட்ட கலைத்துறை அப்துல் லத்தீப் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சத்தியமூர்த்தி வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.
- பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
நெல்லை:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
135 பள்ளி வாகனம்
இந்நிலையில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளை சேர்ந்த 511 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் வேகக்க ட்டுபாட்டு கருவி, கண்காணிப்பு காமிரா, முதல் உதவி பெட்டி, வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசர கால வழி, தீயணைப்பு கருவி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உளளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் டிரைவர்களுக்கு 108 மருத்துவ குழுவின் மூலம் முதல் உதவி சிசிக்சை பற்றிய விளக்கம் மற்றும் தீயணைப்பு துறை மூலம் டிரைவர்களுக்கு அவசர காலத்தில் தீயணைப்பானை பயன்படுத்தும் முறைப்பற்றி செயல்முறை அளிக்கப்பட்டது.
டிரைவர்களுக்கு அறிவுரை
மாணவர்களை பாது காப்பாக ஏற்றிச் சென்று விபத்தில்லாமல் இயக்குமாறும் மற்றும் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிற்கு மாறும் அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களை விழிப்புணர்வோடு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமிண்ட்சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி , பாலாஜி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் அறிவுசார்மையங்கள் கட்டுதல், உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு சந்தைகள் அமைத்தல் , சாலைவசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், மன்றத்தலைவர்கள் கவியரசு, மிதுன்சக்கர வர்த்தி, செயல்அலுவலர் விஜயலட்சுமி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
- வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
உடுமலை:
உடுமலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பணிகள் கடந்த மே 3 தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா். அப்போது, நடைபெற்ற புதிய எந்திரங்கள் பொருத்தும் பணியையும் பாா்வையிட்டாா்.தொடா்ந்து, உடுமலை வட்டம், ராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மேலாண்மை இயக்குநா் சண்முகநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
- உழவர் குழுவினர் உள்ளிட்ட பலர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் அருகே தில்லையாடி கிராம ஊராட்சியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடைப்பெற்றுவருகிறது.
இந்நிலையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தாசில்தார் காந்திமதி, ஊராட்சி செயலர் செல்வராணி, மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், உழவர் குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
- மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
- போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
தேனி:
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி, அணைக்கரை ப்பட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்க ன்பட்டி ஊராட்சிப்பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, சிறு பாலம், வடிகால் அமைக்கும் பணி, வலையபட்டி கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீரினை வடிகால் மூலம் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டு வரும் இடம்.
அணைக்கரைப்பட்டி ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப்பணி, நபார்டு வங்கியின் மூலம் போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையே யான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.
முன்னதாக மஞ்சி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.