என் மலர்
உள்ளூர் செய்திகள்

போளூர் பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
- பண்ணை குட்டை கரைகளை பலப்படுத்த அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் (திண்டிவனம்) அப்பகுதியில் கலெக்டர் முகேஷ் பார்வையிட்டார்.
அத்திமூர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் வாழை பூங்கா அமைப்பதற்கான தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட இருக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அத்திமூர் கிராமத்தில் பண்ணை குட்டை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார்
மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கழிவறை ஆய்வு செய்த கலெக்டர் கழிவறை தூய்மையாக வைத்துக் கொள்ளும் படியும் பள்ளி வளங்களை உள்ள குப்பைகளை அகற்றவும் அறிவுரை வழங்கினார்.
இதில் போளூர் தாசில்தார் சண்முகம், போளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






