search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர்.
    • உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    லண்டன்:

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.

    அவர் 30000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி இந்தியாவின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    மறுபுறம் 2008-ல் அறிமுகமான விராட் கோலியும் கிட்டத்தட்ட சச்சின் போலவே நவீன கிரிக்கெட்டில் உலகின் டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்து இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் சில சமயங்களில் சச்சினை விட விராட் கோலிதான் சிறந்தவர் என்று ரசிகர்கள் கூறுவது வழக்கமாகும்.

    இந்நிலையில் சச்சினை விட பிரையன் லாரா சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான டேவிட் லாய்ட் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் நான் செய்த ஒரு ஆராய்ச்சியை இங்கே சொல்கிறேன். இங்கே 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர். சச்சின் தன் ஈகோவை வீட்டிலேயே விட்டு விடுவார். மறுபுறம் விராட் கோலி மிகவும் ஆளுமை மிக்க வீரர் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அற்புதமானவர். விராட் கோலி ஆபத்தானவர்.

    ஒருவேளை சச்சின் மற்றும் லாரா ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் நான் லாராவை தேர்ந்தெடுப்பேன். கண்டுபிடிக்கப்படாத இடங்களில் கூட பந்தை அடிக்கக்கூடிய லாரா எல்லாவற்றையும் இயல்பாக செய்யக்கூடியவர். இருப்பினும் அதை நான் சச்சினிடம் பார்த்ததில்லை. சச்சின் எப்போதும் சமநிலையில் இருப்பார்.

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் அவரும் அற்புதமான வீரர்கள். உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சச்சின் உன்னதமானவர். அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று பார்க்கும்போது விராட் கோலி சிறந்தவர்.

    என்று கூறினார்.

    சில நாட்களுக்கு முன்பு தரம்சாலாவில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி அசைச்சத்தம் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததை வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுவது போன்று சைகை காட்டி கொண்டாடினார்.

    அதன்பின்பு கரண் சர்மா பந்துவீச்சில் ரிலீ ரோசோவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்ஷன் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்டார் மீடியாவில் ரிலீ ரோசோவ் பேட்டியளித்தார். அப்போது, "எல்லா டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை, அது நடக்கவே நடக்காத ஒன்று" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் 5 அரை சதங்கள் மற்றும் ஒரு அபார சதத்துடன் 661 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை.
    • எந்த விஷயத்தையும் எட்ட முடியாமல் விட்டுவிட்டு, அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 35 வயதான இவர் தற்போதும் முழு உத்வேகத்துடன் 100 சதவீதம் பங்களிப்பை அணிக்காக கொடுத்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். இதனால் டி20 அணியில் சேர்க்கப்பட்டார்.

    டி20 கிரிக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆனால் விராட் கோலி ஒருபோதும் ஓய்வு தொடர்பாக பேசியது கிடையாது. இந்திய அணிக்காக தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    ஒரு விளையாட்டு வீரராக எங்களுடைய விளையாட்டு வாழ்க்கையும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் நான் சற்று பின்னோக்கி செல்கிறேன். இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், என்னால் எப்போது தொடர்ந்து செல்ல முடியாது.

    எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன். ஒருமுறை எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன்பின் நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதம், 30 அரைசதங்களுடன் 8848 ரன்கள் குவித்துள்ளார். 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சதம், 72 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ளார். 117 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4037 ரன்கள் அடித்துள்ளார்.

    • இஷாந்த சர்மா ஓவரில் விராட் கோலி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசினார்.
    • கடைசியில் விராட் கோலி விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தி அவரை கிண்டலடிப்பார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி தரப்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இஷாந்த் சர்மா பந்து வீச வரும் போது விராட் கோலியிடம் வம்பு இழுப்பார். அந்த ஓவரில் முதல் பந்தை விராட் பவுண்டரியும் 2-வது பந்தை சிக்சரும் விளாசுவார். உடனே இஷாந்த் சர்மாவை பார்த்து விராட் கோலி சிரித்தபடி ஏதோ கூறுவார். அதனை தொடர்ந்து வீசிய பந்தை டாட் பந்தாகவும் அடுத்த பந்தை வைடு பந்தாகவும் இஷாந்த் வீசுவார்.

    4-வது பந்தில் விராட் கோலியை இஷாந்த் சர்மா அவுட் செய்வார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா விராட் கோலியை சிரித்தப்படி கிண்டல் செய்வார். விராட் கோலியும் பதிலுக்கு சிரித்தபடியே கடந்து செல்வார். நண்பனிடம் அவுட் ஆவதும் சந்தோஷம்தான் என்பது போல விராட் சிரித்தப்படி செல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதனை தொடர்ந்து டெல்லி அணியின் கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா களத்திற்குள் வருவார். அவர் வரும்போதில் இருந்தே விராட் கோலி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக இதுபோல நண்பர்கள் இந்த வீடியோவை தனது நண்பர்களை Tag செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    • டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம்.
    • பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பல விவாதங்களுக்கு பின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் அவரை உலகக் கோப்பையில் துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். அதற்கு அவருடைய கடைசி சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் தான் சாட்சியாகும். டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அடிக்கடி 240 - 250 ரன்கள் அடிப்பதை பார்க்க முடிகிறது.

    அதற்கு காரணம் பேட்டிங் பிட்ச்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள். இம்பேக்ட் வீரர் விதிமுறையால் அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுவதால் புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. அங்கே அசத்துவதற்கு நீங்கள் மிகுந்த திறமையுடன் இருக்க வேண்டும். பும்ரா, அக்சர், குல்தீப் ஆகியோர் அதே சூழ்நிலைகளில் அசத்துகின்றனர்.

    இவ்வாறு கங்குலி கூறினார். 

    • அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.
    • ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி விராட் கோலி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரிலீ ரோசோவ் - ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.

    • பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து விராட் கோலியுடன் பட்டிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பட்டிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து இறுதியில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

    இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார். 

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    • நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது.
    • 16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

    கராச்சி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதனால் பெங்களூரு அணி தோற்கும் போதெல்லாம் அதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி போன்ற தனிநபரால் கோப்பையை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் என்ன விமர்சனத்தை எதிர்கொள்கிறார்? ஒரு வீரர் 100 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்தால் அது நன்றாக இல்லையா? ஒருவேளை அதே ரன்களை வைத்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனங்கள் வருமா? கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் விராட் கோலி சந்திக்கிறார். நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது. எனவே அவரை விமர்சிப்பது தேவையற்றது நியாயமற்றது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது.

    16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் பலவீனமாக இருக்கின்றனர். சிலர் பவுண்டரி அளவு சிறியதாக உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் 1987-ல் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடியபோது இருந்த அதே பவுண்டரி அளவு தான் பெங்களூரு மைதானத்தில் இப்போதும் இருக்கிறது.

    270 ரன்கள் அடிக்கப்படும் ஐ.பி.எல். தொடரில் ஒருவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் உடனே நங்கூரமாக விளையாடுகிறார் என்று அனைவரும் சொல்கின்றனர். அதனால் இப்போதெல்லாம் நீங்கள் முதல் பந்திலிருந்தே நிற்காமல் அடிக்க வேண்டிய நிலைமையை சந்திக்கின்றனர்.

    என்று அக்ரம் கூறினார்.

    • விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் இந்த தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி விராட் கோலி தனது இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "என் வாழ்க்கையில் உன்னை கண்டறியாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையையே மொத்தமாக தொலைத்திருப்பேன். எங்கள் வாழ்வின் ஒளி நீ.

    நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்!"

    என்று தெரிவித்துள்ளார்.

    ×