என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bangalore royal challengers"
- டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.
- ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரி மீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித் தொடரில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியாகெர், நடாலி ஸ்கிவர்-பிரன்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.பந்து வீச்சில் சைகா இஷாக், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலம் வாய்ந்ததாக உள்ளது.
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. அந்தஅணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் சோபியா டிவன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஹீதர் நைட், மேகன்ஷட், ரேணுகா சிங் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி 223 ரன்கள் குவித்தது. இதனால் பெங்களூரு அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை டெல்லி வீழ்த்தியது. இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை உ.பி.வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியா சத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றது. டெல்லி, உ.பி.வாரியர்ஸ் அணிகள் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 48 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்டே 32 ரன்னும், யுவராஜ்சிங் 23 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. டி.வில்லியர்ஸ் நிலைத்து நின்று விளையாடினார்.
பெங்களூருக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. களத்தில் டிவில்லியர்ஸ், துபே இருந்தனர். அந்த ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்தில் துபே சிக்சர் அடித்தார். அடுத்து 4 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது.
கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. சிக்சர் அடித்தால் ஆட்டம் ‘டை’ ஆகும் சூழ்நிலை இருந்தது. அந்த பந்தை எதிர்கொண்ட துபே ரன் எதுவும் எடுக்கவில்லை. புல் டாசாக வீசப்பட்ட பந்தை துபே அடித்தபோதும் கீழேயே சென்றது.
அப்போது மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியது டி.வி. ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. அவர் கீரிசை விட்டு சில இன்ச் காலை வைத்து பந்தை வீசி இருந்தார். ஆனால் அதை நடுவர் கவனிக்க தவறி விட்டார்.
நடுவர் நோ-பாலை கவனித்து இருந்தால் ஒரு ரன் மற்றும் பிரீ-ஹிட் பெங்களூர் அணிக்கு கிடைத்து இருக்கும். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறி இருக்கலாம்.
இதனால் பெங்களூர் கேப்டன் விராட்கோலி மற்றும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் மைதானத்தில் ஒருவித ஆவேசத்துடன் நின்று இருந்தனர்.
இது தொடர்பாக கோலி நடுவர்களிடம் சென்று பேசினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தோல்வி குறித்து கோலி ஆதங்கத்துடன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறோம். கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. கடைசி பந்தை நோ-பால் என்று அறிவிக்காதது கேலிக் குரியது.
நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். கடைசி பந்தை கிரீசை விட்டு சில இன்ச்சுகள் தள்ளி காலை வைத்து வீசப்பட்டுள்ளது. இது ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டது. அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, உண்மையிலேயே நான் எல்லை கோட்டை தாண்டிய போது தான் நோ-பால் வீசப்பட்டது தெரியும்.
இதுபோன்ற தவறுகள் விளையாட்டுக்கு நல்லதல்ல. பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஒரு பந்து வைடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது வைடு பந்து கிடையாது.
இந்த ஆடுகளத்தில் 180 ரன் என்பது சவாலான இலக்கு கிடையாது. இந்த ஆடுகளத்தில் 200 ரன் இலக்குடன் செல்ல வேண்டும். ஆனாலும் எங்க ளது பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.
விராட்கோலி, டிவில்லியர்ஸ் பார்டன்ஷிப்பை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நம்பினேன் என்றார். #IPL2019 #ViratKohli
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்