என் மலர்

    நீங்கள் தேடியது "Jonny Bairstow"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.
    • ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என வாசிங் ஜாபர் கூறினார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் - ஜோரூட் சதம் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது. ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்தபோது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. #JonnyBairstow
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்த போது காயமடைந்தார். பந்து சரியாக அவரது இடது கை விரல்களை தாக்கியதால் வலியால் துடித்தார். உடனடியாக வெளியேறிய அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

    ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இடது கை நடுவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய தொடரில் ஆடுவது சந்தேகம் தான். 2-வது இன்னிங்சில் அவசியம் ஏற்பட்டால் பேட்டிங் செய்வார்.  #JonnyBairstow
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று சதம் அடித்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். #SCOTvENG
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்திற்கு எதிராக 371 ரன்கள் குவித்த கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து, 6 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோவ் 59 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் வெற்றியை நோக்கிச் சென்ற இங்கிலாந்து 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 365 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததற்கு, கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டில் இதுபோன்ற தோல்வி சகஜம்தான் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி விளையாட்டு போட்டியின் ஒரு பகுதி. நீங்கள் நம்பர் ஒன் அணியாக இருக்கும்போது, மக்கள் உங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்பவார்கள். ஆனால் நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்க விரும்புவீர்கள்.



    நாங்கள் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்காக விளையாடுகிறோம். நாங்கள் நம்பர் ஒன் ஆக இருந்தாலும், இல்லை என்றாலும் ஸ்காட்லாந்து அணி அவர்கள் வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். தற்போதைய வெற்றி கொண்டாட்டம் சாதாரணமாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றோம்.

    முன்னணி வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது வித்தியாசமான சவால். முற்றிலும் மாறுபட்ட ஆஸ்திரேலியா அணி. அவர்களுக்கு எதிராக விளையாட இருக்கிறோம். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், வார்னர், ஸ்மித் இல்லாமல் புது வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த வீரர்கள் அணியில் நிரந்தர இடம்பிடிக்க விரும்புவார்கள். நிரந்த இடத்திற்கு வீரர்கள் விரும்புவது எவ்வளவு அபாயகரமானது என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    ×