search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான்- ஸ்காட்லாந்து தோல்வி குறித்து பேர்ஸ்டோவ்
    X

    இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான்- ஸ்காட்லாந்து தோல்வி குறித்து பேர்ஸ்டோவ்

    ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று சதம் அடித்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். #SCOTvENG
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்திற்கு எதிராக 371 ரன்கள் குவித்த கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து, 6 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோவ் 59 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் வெற்றியை நோக்கிச் சென்ற இங்கிலாந்து 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 365 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததற்கு, கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டில் இதுபோன்ற தோல்வி சகஜம்தான் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி விளையாட்டு போட்டியின் ஒரு பகுதி. நீங்கள் நம்பர் ஒன் அணியாக இருக்கும்போது, மக்கள் உங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்பவார்கள். ஆனால் நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்க விரும்புவீர்கள்.



    நாங்கள் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்காக விளையாடுகிறோம். நாங்கள் நம்பர் ஒன் ஆக இருந்தாலும், இல்லை என்றாலும் ஸ்காட்லாந்து அணி அவர்கள் வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். தற்போதைய வெற்றி கொண்டாட்டம் சாதாரணமாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றோம்.

    முன்னணி வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது வித்தியாசமான சவால். முற்றிலும் மாறுபட்ட ஆஸ்திரேலியா அணி. அவர்களுக்கு எதிராக விளையாட இருக்கிறோம். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், வார்னர், ஸ்மித் இல்லாமல் புது வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த வீரர்கள் அணியில் நிரந்தர இடம்பிடிக்க விரும்புவார்கள். நிரந்த இடத்திற்கு வீரர்கள் விரும்புவது எவ்வளவு அபாயகரமானது என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    Next Story
    ×