search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes 2023"

    • உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
    • 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர். 

    அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

    பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    • முதல் இரண்டு போட்டிகளிலும இங்கிலாந்து வெற்றி
    • 3-வது போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    • தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நாதன் லயன் சாதனை படைத்திருந்தார்.
    • அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து விளையாடிய 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சாதனை படைத்த நாதன் லயன் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனையடுத்து அவர் ஓவர் வீசவில்லை.

    2-வது இன்னிங்சின் போது மட்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அதுவும் நொண்டி நொண்டியே ரன்களை சேர்த்தார். அவர் விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மர்ஃபி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
    • பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார்.

    லண்டன்:

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவர் முடிந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே இருந்து சில போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். குறிப்பாக வார்னரை நோக்கி ஓடினர். அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த வர்ண பொடியை மைதானத்தில் தூவினர்.

    பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார்.

    இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • 4ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் சதமடித்து 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 141 ரன்னும், அலெக்ஸ் கேரி 66 ரன்னும், டிராவிஸ் ஹெட் 50 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது.

    அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.

    7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், பேர்ஸ்டோ 20 ரன்கள், மொயீன் அலி 19 ரன், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள், ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. 

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் மற்றும் ப்ரூக் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • இங்கிலாந்து தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நடக்கிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    ஜாக் கிராலி 7 ரன்னுடனும், பென் டக்கெட் 19 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில் இன்று 4-ம் நாள் தொடங்கியது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் மற்றும் ப்ரூக் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் 22 ரன்னிலும் பேர்ஸ்டோ 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • லபுசேன் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்
    • ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்

    ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நேற்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஜோ ரூட்டின் (118 நாட்அவுட்) அபார சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றயை முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 8 ரன்னுடனும், கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பிராட் அடுத்தடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்துக்கு முன்னணி கொடுத்தார்.

    நம்பிக்கை வீரரான ஸ்மித் அடுத்து களம் இறங்கினார். அவரை 16 ரன்னில் எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். இதனால் 67 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது.

    உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 40 ரன்களுடனும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி சிறந்த பார்ட்னர்சிப் அமைத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தும். இல்லையெனில் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

    • ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
    • இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

    ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.

    குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் 'டிரா'வில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

    இந்நிலையில் தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    • இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
    • அதிக அளவில் யோசித்தால் நெருக்கடிதான் ஏற்படும்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-2 என 2015-ல் வீழ்த்தியது. அதன்பின் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அதேவேளையில் 2017-18 மற்றும் 2021-22-ல் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வென்றுள்ளது.

    பழைய வரலாறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'பாஸ்பால்' எனப்படும் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதை ஆஷஸ் தொடரிலும் கடைபிடிப்போம் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.

    ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இங்கிலாந்து அணி குறித்து அவர் கூறுகையில் ''ஆஸ்திரேலியா சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு எதிராகவும் வெளிப்படும். இது மிகப்பெரிய சவால் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இது மிகப்பெரியது என்பது தெரியும்.

    பந்து வீசுவது, பேட்டிங் செய்வது மற்றும் பீல்டிங் செய்வது ஆகிய இந்த நோக்கத்தில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அது அழுத்தத்தை கொடுத்துவிடும்.

    நாங்கள் இதற்கு முன் எப்படி விளையாடினோமோ, அதே உத்வேகத்தில் விளையாட விரும்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும்'' என்றார்.

    • இங்கிலாந்து சமீபத்தில் 13 போட்டிகளில் 11-ல் வெற்றி கண்டுகள்ளது
    • பேட்ஸ்மேன்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் நோக்கம்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் பாரம்பரியமான தொடர். இந்தத் தொடரை இழக்க இரு அணிகளும் விரும்பாது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், மெக்கல்லம் பயிற்சிலும் இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' என்ற பயமறியாமல் அதிரடியாக விளையாடி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கும் அணுமுறையை மேற்கொண்டுள்ளது.

    இதன்காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 13 டெஸ்ட் போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைபிடிக்குமா? என ரசிகர்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் 'பாஸ்பால்' ஆட்டம் குறித்து ஸ்மித் கூறியதாவது:-

    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எங்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி பாஸ்பால் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எப்போதும் இதை நான் கூறி வருகிறேன். உண்மையிலேயே அதை பார்க்க ஆர்வமாக இருக்கும். கடந்த 12 மாதங்களாக தங்களது அணுகுமுறையை மாற்றி சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்து ரசிப்பேன் என்பதை உறுதியாக கூறுவேன்.

    ஆனால், எங்களுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹேசில்வுட் காயத்தால் ஓய்வில் உள்ளார். காயம் குணமடைந்தால் அணியில் இணைவார். இல்லையெனில் ஸ்காட் போலண்ட் அவருக்குப் பதிலாக களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் போலண்ட்தான் களம் இறங்கியுள்ளார்.

    • ஜூன் 16-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.
    • கடந்த ஆண்டு 46 டெஸ்ட் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்த வார தொடக்கத்தில் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய லீச், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கீழ் இங்கிலாந்து அணியில் எப்போதும் லீச் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 46 டெஸ்ட் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் வெளியேற்றப்பட்ட நிலையில், லீச்சின் காயம் இங்கிலாந்தின் பந்துவீச்சுத் துறைக்கு பின்னடைவாகும்.

    ஜூன் 16-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.

    சனிக்கிழமையன்று இங்கிலாந்து அறிவித்த முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×