search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup"

    • உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
    • இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.

    உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

    என்று சித்து கூறினார்.

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறியதாவது:-

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார். 

    • ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
    • ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
    • இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.

    இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்
    • விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.

    இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

    • இன்று முதல் 20-ந்தேதி வரை நான்கு நகரங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
    • மே 16-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை 2-வது கட்டமாக கயானா, டிரினிடாட் அண்டு டொபாகோ எடுத்துச் செல்லப்படுகிறது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் (டிராபி) சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளது. இன்று அமெரிக்க வீரர் அலி கான் மற்றும் இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றவரும், யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நடத்தும் ஆறு நகரங்களில் உலா வர இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பிரபலங்கள் இந்த கோப்பையை ஏந்தி செல்வார்கள். போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் பார்படோஸ் நகரில் முதன்முதலில் வலம் வர இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்று கோப்பைகள் எடுத்துச் செல்வது வழக்கம். உலகம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் அல்லது போட்டியை நடத்தும் நாட்டில் இதுபோன்று கோப்பை எடுத்துச் செல்லப்படும். ரசிகர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றை ஈர்ப்பதற்கான ஒரு வழி இதுவாகும். போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இவ்வாறு நடத்தப்படும்.

    ஏப்ரல் 12-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை பார்படோஸ், ஆன்டிகுவா, பார்புடா, செயின்ட் லூசியா ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்படும். பின்னர் மே 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை செயின்ட் வின்செட், கிரேனடைன்ஸ், டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் கயனா ஆகிய இடங்களில் எடுத்துச் செல்லப்படும்.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
    • விராட் கோலி டி20-யில் இருந்து விலகியிருந்த நிலையில், அவரது ஆட்டம் அணியில் இடம் பெறுவதை காட்டுகிறது.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    அதேவேளையில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாவித் மலான், இந்தியா சரியான வகையில் வீரர்களை தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தாவித் மலான் கூறுகையில் "நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் புதிய வீரர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்திய கிரிக்கெட் போர்டு அதிக திறமையுள்ள வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தபோதிலும் கூட, ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் இந்தியாவின் இறுதி அணிக்கான வலிமையான போட்டியாளர் என்பதை காட்டுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ரசிகர்களை ஈர்க்கும் வகையில மிகச்சிறந்த வகையில விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான தாவித் மலான் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வருவதாக அஞ்சப்படுகிறது. தாவித் மலான் தற்போது யார்க்ஷைர் அணியின் சப்போர்ட் கோச்சாக பணியாற்ற உள்ளார்.

    இருந்தபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
    • விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

    டி20 உலகக்கோபை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    தற்போது  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு உலகக் கோப்பை வருவதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்காது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் அணியில் இணைவதற்கு தயாராகி வருகிறார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

    சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு இடம் உறுதி என்பதில் சந்தேகம் இருக்காது.

    அதிவேகமாக பந்து வீசும் மயங்க் யாதவ் தேர்வாளர்கள் மனதில் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சுக்கான இடத்தை பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடிக்கலாம்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
    • பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.

    2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.

    அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
    • இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது.

    இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது எனவும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. இதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்கு பாதிப்பை கொடுக்கும் என ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

    விராட் கோலி இல்லாமல் டி20 உலக கோப்பை அசாத்தியமற்றது. அவர்தான் நம்மை 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகன் அவர்தான். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன?

    இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்கவேண்டும். எந்த உலக கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100 சதவீதம் கண்டிப்பாக அவர் தேவை. 2011-ல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    ×