search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dawid Malan"

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
    • விராட் கோலி டி20-யில் இருந்து விலகியிருந்த நிலையில், அவரது ஆட்டம் அணியில் இடம் பெறுவதை காட்டுகிறது.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    அதேவேளையில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாவித் மலான், இந்தியா சரியான வகையில் வீரர்களை தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தாவித் மலான் கூறுகையில் "நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் புதிய வீரர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்திய கிரிக்கெட் போர்டு அதிக திறமையுள்ள வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தபோதிலும் கூட, ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் இந்தியாவின் இறுதி அணிக்கான வலிமையான போட்டியாளர் என்பதை காட்டுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ரசிகர்களை ஈர்க்கும் வகையில மிகச்சிறந்த வகையில விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான தாவித் மலான் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வருவதாக அஞ்சப்படுகிறது. தாவித் மலான் தற்போது யார்க்ஷைர் அணியின் சப்போர்ட் கோச்சாக பணியாற்ற உள்ளார்.

    இருந்தபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் டேவிட் மலான் சதமடித்து அசத்தினார்.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 76 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார். ஹிருடோய் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேசம் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பேர்ஸ்டோவ், டேவிட் மலான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், மலானுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மலான், ஜோ ரூட் 151 ரன்கள் சேர்த்தனர். மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    இறுதியில், இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • ரோகித் சர்மா அணியில் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.
    • இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகத்தில் தான் உள்ளது. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வராத பட்சத்தில் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.

    இது குறித்து டேவிட் மலான் கூறியதாவது:-

    ரோஹித் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனை இழப்பது இந்திய அணிக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமானது. அவர் விளையாடவில்லை என்றால் அணிக்கு பெரிய இழப்பாகும். ஆனால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.

    இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர். ஆனால் அவர்களால் ரோகித் இடத்தை நிரப்ப முடியாது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு போட்டிகளை அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து வீரர் தாவித் மலனை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்னில் சுருண்டது.

    13 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னி்ங்சை தொடங்கியது. இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.



    இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இங்கிலாந்து 70 ரன்கள் எடுத்திருக்கும்போது தாவித் மலன் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆக்ரோஷமாக தாவித் மலன் அருகில் சென்று சைகை காட்டினார்.



    இது ஐசிசி-யின் விதிமுறைக்கு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமும், தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இஷாந்த் ஷர்மா அபராதத்தை ஒத்துக் கொண்டதால் விசாரணையின்றி இந்த பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது,
    ×