என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ரோகித் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு- டேவிட் மலான்
- ரோகித் சர்மா அணியில் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.
- இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகத்தில் தான் உள்ளது. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வராத பட்சத்தில் பும்ரா இந்திய அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இல்லாவிட்டால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.
இது குறித்து டேவிட் மலான் கூறியதாவது:-
ரோஹித் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனை இழப்பது இந்திய அணிக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமானது. அவர் விளையாடவில்லை என்றால் அணிக்கு பெரிய இழப்பாகும். ஆனால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை காலம்தான் சொல்லும்.
இந்திய அணியில் சில அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் பக்கபலமாக உள்ளனர். ஆனால் அவர்களால் ரோகித் இடத்தை நிரப்ப முடியாது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டு போட்டிகளை அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்