search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollution"

    • 1960களில் இருந்தே காலி-பீலிக்கள் மும்பையில் மிக பிரபலம்
    • சுமார் 40 ஆயிரம் காலி-பீலிக்கள் புழக்கத்தில் இருந்தன

    இந்தியாவின் 'பொருளாதார தலைநகரம்' என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை, 1950களில் இருந்தே பல மாநில மக்கள் வாழ்வாதாரத்தை தேடி வரும் நகரமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் நகரம் என்பதால் பலவித போக்குவரத்து வாகனங்கள் அங்கு புழக்கத்தில் உள்ளன.

    1960களில் இருந்து அங்கு பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் (PAL) நிறுவனத்தின் "பிரிமியர் பத்மினி" (Premier Padmini) டாக்சிகள் மிகவும் பிரபலம்.

    கருப்பு-மஞ்சள் என இரு நிறங்கள் மட்டுமே தீட்டப்பட்டதால் காலி-பீலி என மக்களிடையே பிரபலமடைந்த இந்த வாடகை கார்களின் ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.

    வாகனங்களிலிருந்து வரும் புகையினால் ஏற்படும் சுகாதார கேட்டை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு, 20 வருடங்களான வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்தது. கடைசி பிரிமியர் பத்மினி 2003 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, நேற்றிலிருந்து இவை சாலையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டன.

    மும்பையின் பிரபாதேவி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் கர்சேகர், கடைசியாக பதிவு செய்யப்பட்ட டாக்ஸியின் உரிமையாளராவார். இந்த டாக்சி "மும்பையின் பெருமை, எனது வாழ்க்கை" என அவர் தன் வாகனத்தை குறித்து உருக்கமாக தெரிவித்தார்.

    புள்ளி விவரங்களின்படி சுமார் 40 ஆயிரம் காலி-பீலி டாக்சிகள் மும்பையில் உள்ளன. இவையனைத்தையுமே இனி சாலைகளில் காண முடியாது. 



    சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருந்த காலி-பீலிக்களை மும்பை மக்கள் கனத்த இதயத்துடன் பிரிவதாக கூறுகிறார்கள். எனவே, இவற்றில் சில வாகனங்களையாவது அருங்காட்சியகத்தில், அரசாங்கம், காட்சிக்கு வைக்க வேண்டும் என மும்பை மக்கள் விரும்புகின்றனர்.

    இந்தி உட்பட ஏராளமான இந்திய திரைப்படங்களில் காலி-பீலிக்கள் முக்கிய மறைமுக கதாபாத்திரமாக இடம்பெறுவது வழக்கம்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார், பிரிமியர் பத்மினி என பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    பல பிரபலங்கள் காலி-பீலி குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திரா இது குறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.



    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை

    மக்கள் நல பாது காப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் முதல்- அமைச்சர், தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தனப் போக்கால் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதியில் சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதும், பல்வேறு இடங்கள் குப்பைகள் நிறைந்து இருப்பதும் அன்றாடம் காணப்படும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் கொசு உறுபத்தியாகி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 100-க்கும் அதிகமான நாய்கள் வெறி பிடித்த நிலையில் நகரை சர்வ சாதாரணமாக சுற்றி வலம் வருகின்றது. நாய் கடியால் ஏராளமான பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள், வெளி நோயாளியாக தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றார்கள். இன்று வரை இந்த நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் நகர் சார்ந்த பணிகள் திட்டமிடல் இல்லாத காரணத்தால் நகராட்சி நிதி வீணடிக் கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி அதிகாரி கள் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடை பிடித்து வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருக்கி றார்கள்.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மீது தனி கவனம் செலுத்தி தனி அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க பொதுமக்கள் சார்பாகவும், எங்கள் கழகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது
    • இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது


    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
    • 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து. செய்யப்படுகிறது.

    டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.

    இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

    • மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-உடுமலையில் பெரியபட்டி கிராமம், தாராபுரத்தில் சின்னமருதூர்,குருணைக்கல் பட்டி கிழக்கு வலசு ஆகிய பகுதிகளில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் காற்றும் நீரும் மாசுபடுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்ய முடிவதில்லை.நீர்நிலைகளில் கரித்துகள்கள் படர்ந்துள்ளதால், பொதுமக்களும், கால்நடை வளர்ப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    விவசாய நிலங்களில் இயங்கிவரும் இந்த ஆலைகளுக்கு, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் வாயிலாக 3முறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீல் உடைத்து சட்டவிரோதமாக ஆலையை இயக்குகின்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதி பெறாமலும், ஊராட்சி கட்டட விதிப்படி உரிய கட்டுமான அனுமதி பெறாமல் விவசாய நிலத்தில் தடை செய்யப்பட்ட தொட்டி கரி சுடும் ஆலை இயக்குகின்றனர்.

    8 ஆலைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவுக்குப் பின்னரும், 3 ஆலைகள் மட்டுமே இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 5 ஆலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

    சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் தொட்டி கரி ஆலைகளை உடனடியாக இடித்து அகற்ற மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தருமபுரி

    தருமபுரி - சேலம் மெயின் ரோடு ஒட்டப்பட்டியில் தொழில் மையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் மையத்தில் பட்டு நூல் தயாரிக்கும் தொழிற்சாலை, பைப், சின்டெக்ஸ் டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலை, உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளில் இருந்து கழிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ப்பு நிறுவனமான (சிப்கோ) கிளை அலுவலகம் அருகிலேயே எரிக்கச் செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மாசு புகையினால் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும், இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர்.

    எனவே, உரிய நிர்வாகத்தினர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் மாசுபடுகிறது. இதனை தடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழகம். கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கி றது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து முக்கிய சுற்றுலா தளங்களிலும் நகர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்லுவதால் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வரும் வன விலங்குகள் மற்றும் பசு மாடுகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது.

    இதனால் விலங்குகளும் இறந்து விடுகின்றன மேலும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது.

    2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சர்வேதேச சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என சுமார் 4 வருடத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

    ஆனால் கொடைக் கானலில் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கின்றன.

    இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த விட நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பிளாஸ்டிக் பைகளை கடையில் உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் விலையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். #tajmahal #solarcar
    லக்னோ:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஆக்ரா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.

    ஆக்ரா நகரின் நெரிசல் மிகுந்த சாலையில் மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியாய் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டும், வாகனங்கள் வெளியிடும் புகையால் தாஜ் மஹால் மேலும் மாசுபடாமல் தடுக்கும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாணவர்கள், நமது நாட்டில் ஆண்டுதோறும் சூரிய ஒளி கிடைப்பதாலும், இந்த காருக்கான உதிரிபாகங்கள் சுலபமாக கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “நெக்ஸ்ஜென்”  (Nexgen)  காரின் விலை 50 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  #tajmahal #solarcar
    ஜெர்மனியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    பிராங்பர்ட்:

    ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.

    எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.

    இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    ×