search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சங்கி என்றால் "லால் சலாம்" படத்தில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றார் ஐஸ்வர்யா
    • மோடி-அமித் ஷா ஜோடியை கிருஷ்ணர்-அர்ஜுனன் என நேரடியாக பாராட்டினார் ரஜினி

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் படம், "லால் சலாம்" (Lal Salaam). இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று, (ஜனவரி 26), இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, "என் தந்தையை சங்கி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரஜினிகாந்த் சங்கி அல்ல. அவர் சங்கியாக இருந்திருந்தால், லால் சலாம் போன்ற திரைப்படத்தில் பங்கேற்கவே சம்மதித்திருக்க மாட்டார்" என தெரிவித்தார்.

    மகள் ஐஸ்வர்யா இவ்வாறு பேசும் போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

    "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்" (RSS) எனும் அமைப்பிலிருந்து உருவானது இன்றைய பா.ஜ.க. ஆர். எஸ். எஸ். அமைப்பினை ஆதரிப்பவர்களை "சங்கி" என அதன் எதிர்ப்பாளர்கள் அழைக்கின்றனர்.

    பா.ஜ.க. தலைவர்களுக்கும் ரஜினிகாந்திற்கும் நட்பு ரீதியான உறவை தாண்டி, அரசியல் ரீதியாக பிணைப்பு இருந்தது அனைவரும் அறிந்ததே.

    தேசிய நதிநீர் இணைப்பு முயற்சியை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளதால் அக்கட்சிக்கே தனது வாக்கு என முன்னர் ஒரு பொதுத்தேர்தலின் போது ரஜினி தெரிவித்திருந்தார்.


    சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுடனான சந்திப்பின் போது, அவர் எனக்கு கடவுளை போன்றவர் என கூறினார்.


    2016 பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியை ரஜினி பாராட்டினார்.


    குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act) கொண்டு வந்த போது அதனை வரவேற்று, "அதில் இஸ்லாமியர்கள் அச்சப்பட ஒன்றும் இல்லை" என கூறினார்.

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் போது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மகாபாரத அர்ஜுனர்-கிருஷ்ணர் என பாராட்டினார்.


    மேலும், மோடிக்கு எதிராக அரசியலில் பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் போது, "பலர் ஒன்று சேர்ந்துதான் ஒருவரை எதிர்க்க முடியும் எனும் நிலை இருந்தால் அந்த ஒருவர்தானே பலசாலி" என மோடியை நேரடியாக புகழ்ந்தார்.


    2021ல் பா.ஜ.க. அரசு, ரஜினிகாந்தின் நீண்டகால திரைத்துறை பங்களிப்பிற்கு அவருக்கு சினிமாத்துறையின் புகழ் பெற்ற உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.


    புகை மற்றும் மது ஆகியவற்றின் தீமைகள் குறித்து பேசும் போது, உடலாரோக்கியத்தை காக்க, அசைவ உணவிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். அதை விமர்சித்தவர்களுக்கு, "அதில் தவறில்லை" என பதிலளித்திருந்தார்.


    தற்போது உ.பி.யின் அயோத்தியில் பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.


    இப்பின்னணியில், தனது திரைப்படங்கள் வெளியாகும் சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதன் மூலம் திரைப்பட வெற்றியை அதிகரிக்க வழிகோலுவதும் ரஜினிகாந்திற்கு வழக்கமான ஒன்று என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.

    இம்முறை, தான் அதிகம் பேசாமல், தனது மகளின் உரையின் மூலம் அதை நடத்தி கொள்ள முயல்வதாகவும், தான் "சங்கி அல்ல" என காட்டிக் கொண்டு அதன் மூலம் சங்கி எதிர்ப்பாளர்களின் புறக்கணிப்பை சமாளிக்க திட்டமிடுவதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர்.

    • 1960களில் இருந்தே காலி-பீலிக்கள் மும்பையில் மிக பிரபலம்
    • சுமார் 40 ஆயிரம் காலி-பீலிக்கள் புழக்கத்தில் இருந்தன

    இந்தியாவின் 'பொருளாதார தலைநகரம்' என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை, 1950களில் இருந்தே பல மாநில மக்கள் வாழ்வாதாரத்தை தேடி வரும் நகரமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் நகரம் என்பதால் பலவித போக்குவரத்து வாகனங்கள் அங்கு புழக்கத்தில் உள்ளன.

    1960களில் இருந்து அங்கு பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் (PAL) நிறுவனத்தின் "பிரிமியர் பத்மினி" (Premier Padmini) டாக்சிகள் மிகவும் பிரபலம்.

    கருப்பு-மஞ்சள் என இரு நிறங்கள் மட்டுமே தீட்டப்பட்டதால் காலி-பீலி என மக்களிடையே பிரபலமடைந்த இந்த வாடகை கார்களின் ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.

    வாகனங்களிலிருந்து வரும் புகையினால் ஏற்படும் சுகாதார கேட்டை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு, 20 வருடங்களான வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்தது. கடைசி பிரிமியர் பத்மினி 2003 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, நேற்றிலிருந்து இவை சாலையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டன.

    மும்பையின் பிரபாதேவி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் கர்சேகர், கடைசியாக பதிவு செய்யப்பட்ட டாக்ஸியின் உரிமையாளராவார். இந்த டாக்சி "மும்பையின் பெருமை, எனது வாழ்க்கை" என அவர் தன் வாகனத்தை குறித்து உருக்கமாக தெரிவித்தார்.

    புள்ளி விவரங்களின்படி சுமார் 40 ஆயிரம் காலி-பீலி டாக்சிகள் மும்பையில் உள்ளன. இவையனைத்தையுமே இனி சாலைகளில் காண முடியாது. 



    சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருந்த காலி-பீலிக்களை மும்பை மக்கள் கனத்த இதயத்துடன் பிரிவதாக கூறுகிறார்கள். எனவே, இவற்றில் சில வாகனங்களையாவது அருங்காட்சியகத்தில், அரசாங்கம், காட்சிக்கு வைக்க வேண்டும் என மும்பை மக்கள் விரும்புகின்றனர்.

    இந்தி உட்பட ஏராளமான இந்திய திரைப்படங்களில் காலி-பீலிக்கள் முக்கிய மறைமுக கதாபாத்திரமாக இடம்பெறுவது வழக்கம்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார், பிரிமியர் பத்மினி என பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    பல பிரபலங்கள் காலி-பீலி குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திரா இது குறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.



    ×