search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage-garbage"

    • ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை நகரில் அமைந்து ள்ள ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம் புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கார ணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் காணப்படும்.

    விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்தில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. பஸ்நிலையத்திற்குள் உள்ள கழிவறைகளும் போதிய சுகாதாரமின்றி இருப்பதால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும்போது ஆரப்பாளையம் பஸ் நிலையத்தின் நிலை மேலும் மோசமாகி விடுகிறது.

    குறிப்பாக பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் குளம்போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி யடைகின்றனர். மேலும் பஸ் நிலையப்பகுதிகளில் உள்ள கடைகளும் சுகாதா ரமின்றி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி பஸ் நிலையத்தை தூய்மை யாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை

    மக்கள் நல பாது காப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் முதல்- அமைச்சர், தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தனப் போக்கால் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதியில் சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதும், பல்வேறு இடங்கள் குப்பைகள் நிறைந்து இருப்பதும் அன்றாடம் காணப்படும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் கொசு உறுபத்தியாகி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    கீழக்கரை நகராட்சி பகுதியில் 100-க்கும் அதிகமான நாய்கள் வெறி பிடித்த நிலையில் நகரை சர்வ சாதாரணமாக சுற்றி வலம் வருகின்றது. நாய் கடியால் ஏராளமான பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள், வெளி நோயாளியாக தினந்தோறும் சிகிச்சை பெற வருகின்றார்கள். இன்று வரை இந்த நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் நகர் சார்ந்த பணிகள் திட்டமிடல் இல்லாத காரணத்தால் நகராட்சி நிதி வீணடிக் கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி அதிகாரி கள் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடை பிடித்து வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருக்கி றார்கள்.

    கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மீது தனி கவனம் செலுத்தி தனி அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க பொதுமக்கள் சார்பாகவும், எங்கள் கழகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுகிறது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளங்களில் ஒன்றாகவும் முக்கிய சுற்றுலா இடமாக வும் உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்தில் கடந்த 2 வருடங்களாக வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக் குளம் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தில் தண்ணீர் முழுவ துமாக நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவுநீரும், பிளாஸ்டிக் பொருட்களும் தெப்பக்குளத்தில் கலந்துள்ளன. இதன் காரணமாக தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி காலை வேளையில் ஏராள மானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாலை வேளைகளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அமர்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். தெப்பக்கு ளத்தின் அருகில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த நிலையில் மதுரை நகரில் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அதிருப்தி அடைந்து ள்ளனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தெப்பக் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×