என் மலர்
செய்திகள்

மாசு கட்டுப்பாட்டை தடுக்க ஜெர்மனி நகரில் டீசல் வாகனங்களுக்கு தடை
ஜெர்மனியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
பிராங்பர்ட்:
ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.
எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.
இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.
எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.
இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
Next Story