search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solar car"

    • உலகின் முதல் சோலார் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    சூரிய ஓளியில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் சோலார் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் லைட்இயர். இந்த நிறுவனம் சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது ப்ரோடக்‌ஷன் ரெடி சோலார் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த சோலார் கார் லைட்இயர் ஒ என அழைக்கப்படுகிறது.

    நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைட்இயர் தனது லைட்இயர் ஒ சோலார் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவை இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளது. லைட்இயர் ஒ எலெக்ட்ரிக் கார் 624 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டது ஆகும். லைட்இயர் மாடலில் 5 சதுர அடி அளவில் இறண்டு வளைந்த சோலார் பேனல்கள் உள்ளன.


    இந்த எலெக்ட்ரிக் காரில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 174 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. லைட்இயர் ஒ மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை பத்து நொடிகளுக்குள் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இந்த காரில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சோலார் ரூஃப் காரை பல மாதங்கள் வரை சார்ஜ் செய்யாமல் இயக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 10.1 இன்ச் செண்டர் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோமோடிவ் மற்றும் கூகுள் நேடிவ் ஒ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது.

    லைட்இயர் ஒ மாடலுக்கு அவ்வப்போது ஓவர்-தி-ஏர் முறையில் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த காரின் விலை 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் விலையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். #tajmahal #solarcar
    லக்னோ:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஆக்ரா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.

    ஆக்ரா நகரின் நெரிசல் மிகுந்த சாலையில் மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியாய் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டும், வாகனங்கள் வெளியிடும் புகையால் தாஜ் மஹால் மேலும் மாசுபடாமல் தடுக்கும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாணவர்கள், நமது நாட்டில் ஆண்டுதோறும் சூரிய ஒளி கிடைப்பதாலும், இந்த காருக்கான உதிரிபாகங்கள் சுலபமாக கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “நெக்ஸ்ஜென்”  (Nexgen)  காரின் விலை 50 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  #tajmahal #solarcar
    ×