search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசு"

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • ஊராட்சியில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • அனைத்து கிராமச்சாலைகளிலும் மரக்கன்றுகள் நட்டு, வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பராமரிக்க வேண்டும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் ஊராட்சி தலைவர் உமாதேவி தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சியில், மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் 1வது வார்டு உறுப்பினர் பெரியசாமி கொடுத்த மனுவில்,ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமச்சாலைகளிலும் மரக்கன்றுகள் நட்டு, வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பராமரிக்க வேண்டும். மசக்கவுண்டன்புதூர் கிராமத்தில், தண்ணீர் மாசடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாட்கோ திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்ட வீடுகள், பயன்பாடு இல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு புதி வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனுவை ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×