search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு"

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்ட போதிலும் கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டே இருந்ததால் மீட்புப் படையினர் கடும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டனர்.

    கட்டுமான பணி நடைபெற்ற இடத்திற்கு அருகே செயல்பட்டு வந்த கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்த 4 பேரும், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கண்டெய்னரில் அமர்ந்திருந்த சிவில் என்ஜினீயர் ஜெயசீலனும் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த 5 பேரில் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    2 பேர் மட்டும் 40 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்கள். என்ஜினீயர் ஜெயசீலன் மற்றும் நரேஷ் என்ற வாலிபர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.

    இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் மீட்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை. எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து நேற்று இரவு விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் 40 அடி பள்ளத்தில் தேடினர். இன்றும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

    • வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.
    • பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள்.

    பேசும் வார்த்தை சரியாக இருந்தால் கூட இடம், பொருள் பார்த்து பேச வேண்டும். இல்லாவிட்டால் சரியாகவே பேசி இருந்தாலும் சிக்கலில் மாட்டிவிட நேரிடும். அப்படி தான் வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானாவும் சிக்கி இருக்கிறார். வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.

    இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னையின் மொத்த தண்ணீரும் வேளச்சேரி பகுதி வழியாக தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் கடல் உள்வாங்க வில்லை. இதனால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியது என்பதோடு அங்கு நடந்த ஒரு விபத்தை பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு பெரிய பேரிடர்கள் வரும்போது இப்படி பட்ட விபத்துக்களும் ஏற்படுவது சகஜம் தான் என்று சாதாரணமாக சொல்லி உள்ளார்.

    இது தான் இப்போது அவரை சிக்கலுக்குள் கொண்டு விட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களும், ஆத்திரப்பட்டது மட்டுமல்ல தி.மு.க.வினரே கோபம் அடைந்து உள்ளனர். இப்படியா பேசுவது? அவருக்கென்ன அடுத்த தேர்தலில் வேறு தொகுதிக்கு சென்று விடுவார். நமக்குத் தானே சிக்கல் என்று தி.மு.க. தரப்பும் கொந்தளிக்கிறது.

    • அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் கொள்ளளவை நெருங்கியதால் அணை களுக்கு வந்த தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் படிப்படியாக குறைந்து வந்தது. 2 நாட்களாக தூறலுடன் மட்டும் நின்றது. நேற்று காலை வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஆனால் இது சற்றுநேரம் தான் நீடித்தது. மதியம் 2 மணிக்கு வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகை யில் மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், தக்கலை, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழை குமரியை புரட்டிப் போட்டது. நாகர்கோவில் கோர்ட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, நாகராஜா கோவில் கிழக்கு வாசல், ஆசாரிமார் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது.

    திங்கள் சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சில சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற வர்கள் பெரிதும் தவிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 117 வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன. இந்த நிலையில் கல்குளம் தாலுகாவில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

    குருந்தன்கோட்டில் 60 மில்லி மீட்டரும், கொட்டா ரத்தில் 57.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 54.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரண மாக அணைகளுக்கு நீர்வ ரத்தும் அதிகமாக உள்ளது. சிற்றாறு அணைகள் கொள்ளளவை நெருங்கி வருவதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மழையின் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.17 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 836 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குருந்தன்கோடு 60, கொட்டாரம் 57.2, நாகர் கோவில் 54.2, இரணியல் 51, மாம்பழத்துறையாறு 48.4, ஆணைக்கிடங்கு 46.8, மயிலாடி 45.2, குளச்சல் 32, அடையாமடை 23, தக்கலை 22, குழித்துறை 16, பூதப் பாண்டி 15.8, முள்ளங்கினா விளை 13.6, கன்னிமார் 12.4, களியல் 11, திற்பரப்பு 10.8, கோழிப்போர்விளை 10.5, சுருளகோடு 10.2, ஆரல்வாய் மொழி 9.4, பேச்சிப்பாறை 3.2, பெருஞ்சாணி 7.6, புத்தன் அணை 7, சிற்றாறு 2- 5.2, முக்கடல் அணை 5.2.

    • உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    • தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது.

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நுள்ளிவிளை ஊராட்சியில் வள்ளி ஆற்றின் கரை கண்டன் விளை ெரயில் பாதை அருகே பேயன் குழி மற்றும் மாடத்தட்டு விளை பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பைகள் கோழி இறைச்சி கழிவுகள் மாமிச உணவுகளின் மீதம் ஆகியவை கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனை நுள்ளிவிளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புறப்படுத்தாத நிலை காணப்படுகிறது. மேலும் அப்பகுதி வீடுகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் மழைநீர் ஓடையில் பாய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது . மேலும் தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் தேங்கி நிற்கும் கழிவுநீர் மூலம் டெங்கு மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் ரீங்காரம் இட்டு நுள்ளிவிளை ஊராட்சியில் சுற்றி வரும் நிலை காணப்படுகிறது. மர்ம காய்ச்சலால் மரணங்கள் பல நிகழும் முன்பு மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
    • கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 12 பொலி காளைகள், வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவ ணித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கர்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 16-ந்தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இதே போல் நடுவர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 56 கால்நடைகள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஏலமிடப்படுகிறது.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்வைப்புத்தொகையாக ரூ.20 ஆயிரத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் பண்ணையின் வங்கி கணக்குவைத்து இருக்கும் ஒரத்தநாடு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் பெறப்படும் வங்கி வரைவோலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலத்தொகை செலுத்து பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள்.

    மற்றயாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கால்நடைகளை ஏலம் எடுத்தவர் முழு ஏலத்தொகையினை செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்ப டுவர்.

    ஏலம் முடிந்தவுடன் முழுத்தொகையையும் உடனே செலுத்தி கால்ந டைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

    தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களல் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி முறையாக முடிவு செய்யாமல் ஒரு சில இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்களால் பொது இடங்கள் சாக்கடைகள் பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி பொது சுகாதார கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள்.

    ஏற்பாடுகள்

    இதன் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் தங்களு டைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி ஆணை யாளர் அவர்களின் முயர்ட்சியின் படி தற்போது நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கம் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து ஜே .கே. ஆர் மெரைன் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று யயயயயய அனைத்து கடைகளிலும் இறைச்சிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கரூர் சென்று அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக் கப்பட்டது.

    தினசரி நாமக்கல் நகராட்சி பகுதி களில் உள்ள இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து கரூரில் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டுள்ளது. எனவே இறைச்சி விற்பனை கடை உரிமை யாளர்கள் தங்களுடைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை இறைச்சி விற்பனை கடை உரிமையாளர் சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படு கிறது இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை

    எனவே இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி பொது இடங்களிலும் சாக்கடை களிலும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    • போலீஸ் டி.ஐ.ஜி. எச்சரிக்கை
    • 04652-220167 என்ற எண்ணிற்கு தொலைபேசியிலும் 7010363173 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    நெல்லை மண்டல போலீஸ் டி.ஐ ஜி. பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நெல்லை மண்டல போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கழிவுகளை யாரேனும் வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டினாலோ அல்லது ஏஜென்டுகள் மூலம் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குழி தோண்டி புதைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர்கள் மீதும் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் திரும்பி வரும்போது வாகனத்தின் உரிமையாளர்களுக்கே சில சமயங்களில் தகவல் தெரிவிக்காமல் கழிவுகளை சரகத்திற்குள் கொண்டு வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு கழிவுகளை யாரேனும் மாவட்டத்திற்குள் கொண்டு வருவது தெரியவந்தாலோ அல்லது கழிவுகளை கொட்டினாலோ குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04652-220167 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம். அல்லது 7010363173 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குப்பைகள் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு, சரும பாதிப்பு ஏற்படுகிறது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சமூக ஆர்வலர் ராம்பிரபு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது :

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பிரதான கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் மூலம் கொள்ளிடம் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.

    இந்நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றுஇடம் இல்லாததால் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

    இவ்வாறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.

    அதோடு குப்பைகள் ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீருடன் அடித்து சென்று கடலிலும் கலந்து வருகிறது.

    இந்த குப்பைகள் ஆற்றில் அடித்து செல்லப்படும்போது நெகிழிகள் புதைந்து கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு போன்ற சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாசு அடைந்த ஆற்று நீரை பருகும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி மின் மயானம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஒரு மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது
    • மாட்டு இறைச்சியின் கழிவுகளை காவிரி ஆற்றிலேயே விட்டு விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாதையன் குட்டை பகுதியில் உள்ள நகராட்சி மின் மயானம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஒரு மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த மாட்டு இறைச்சியின் கழிவுகளை காவிரி ஆற்றிலேயே விட்டு விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் நிலையில் காவிரி ஆறு மாட்டு கழிவுகளால் மாசுபடுவதுடன் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக தெரிவித்தனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மாட்டு இறைச்சி கடையினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ×