search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm"

    • ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
    • இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டிற்கு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் வருகை தந்தனர்.

    அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், அங்கிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஏற்றினார்.

    அதனை தொடர்ந்து, தம்பிக்கோட்டை கீழக்காடு இறால் பண்ணை உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அவர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.

    மீதமுள்ள 6 மாதங்கள் பயன்பாடு இல்லாத போது கே.வி.ஏ. ரூ.40-ல் இருந்து ரூ.150-ஆக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    இறால் பண்ணைக ளுக்கான புதிய லைசென்சு காலதாமதமின்றி வழங்கவும், ரினிவல் விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெற்று வருகிறது.

    எனவே, இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
    • கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 12 பொலி காளைகள், வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவ ணித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கர்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 16-ந்தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இதே போல் நடுவர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 56 கால்நடைகள் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஏலமிடப்படுகிறது.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்வைப்புத்தொகையாக ரூ.20 ஆயிரத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர், கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் பண்ணையின் வங்கி கணக்குவைத்து இருக்கும் ஒரத்தநாடு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் பெறப்படும் வங்கி வரைவோலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலத்தொகை செலுத்து பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள்.

    மற்றயாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கால்நடைகளை ஏலம் எடுத்தவர் முழு ஏலத்தொகையினை செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்ப டுவர்.

    ஏலம் முடிந்தவுடன் முழுத்தொகையையும் உடனே செலுத்தி கால்ந டைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

    தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களல் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
    • கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன.

    திருப்பூர்:

    பொங்கலூா் பகுதியில் கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோழிப் பண்ணைகளில் காணப்படும் ஈக்கள் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பரவியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியதையடுத்து கோழிப் பண்ணை உரிமையாளா்கள் ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தினா்.

    இந்நிலையில், மீண்டும் கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே, கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.

    • பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள முடியும்.
    • அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையின் மானியக்கோரி க்கையின்போது, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கிட திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச்செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு) மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சு பொறிப்பான் மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 வழங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால் பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து, 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

    இத்திட்டத்தின்மூலம் நாட்டுக்கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுப்பொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.

    எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 25.6.23-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும்.
    • ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையை அடுத்த நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள 186 எண்ணிக்கை பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-24-ம் ஆண்டிற்கு அனுபவம் செய்ய பொது ஏலம் அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் நடைபெறுகிறது.

    ஏலம் அரசு விதிமுறை களின்படி நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதா ரர்கள் முன்வைப்புத்தொ கையாக ரூ.10 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும்.

    வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும். ஒரு ஏலதாரரிடம் இருந்து ஒரு வரைவோலை மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனுமதி டோக்கன்கள் வழங்கப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பிவைக்கப்படும்.

    ஏலம் எடுத்த மரங்களின் விளைபயனை அங்கீகரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே அனுபவிக்க இயலும்.

    ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

    ஏலத்தை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைய உள்ளது.
    • பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பிளவக்கல் அணை பகுதி யில் ஏற்கனவே மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்ட மீன் விரலிகள் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக வெம்பக்கோட்டை அணை பகுதியில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட உள்ளது.

    இந்த பண்ணையில் இருந்து பண்ணை குட்டை விவசாயிகள் மற்றும் கண்மாய் ஏலதாரர்கள் ஆகி யோருக்கு அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் (ஒரு மீன் குஞ்சு 30 பைசா முதல் 75 பைசா வரை) மீன் விரலிகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் ஆண்டிற்கு 15 லட்சம் மீன்விரலிகள் உற்பத்தி செய்து விருதுநகர் மாவட்ட நீர்நிலைகளில் இருப்பு செய்து உள்நாட்டு மீன்வளத்தை பெருக்க முடியும்.

    அதன்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    வெம்பக்கோட்டை அணையில் மீன் பிடிக்கும் 5 மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரிய நுண்ணறி அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்கு னர் (மண்டலம்) உதவி இயக்குனர், கட்டுமான பிரிவு பொறியியல் துறை (மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு) மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவை யான நிலங்களில் தடுப்ப ணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான வேளாண் இடு பொருட்கள், பண்ணைக்கருவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விவசாயி களுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழையும் கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் ஏலம் நடைபெறுகிறது.
    • பனைமரங்கள், இலுப்பை மரங்கள், மா மரங்கள், முந்திரி மரங்கள் , இலவம் மரங்கள், புளிய மரங்கள், பலா மரங்கள், நெல்லி மரங்கள் ஏலமிடப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் பலன் தரும் மரங்களான காய்ப்பில் உள்ள 675 மரங்களின் மகசூலை அனுபவிக்கும் உரிமம் ஜூலை 2022 முதல் ஜூன் 2023 முடிய ஆண்டிற்கான பொது ஏலம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் இந்த ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பனைமரங்கள் 100, இலுப்பை மரங்கள் 25, மா மரங்கள் 95, முந்திரி மரங்கள் 10 , இலவம் மரங்கள் 80, புளிய மரங்கள் 325, பலா மரங்கள் 7, நெல்லி மரங்கள் 5 ஏலமிடப்படுகிறது.

    ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக பொது ஏலம் நடத்தப்படும். ஒவ்வொரு வகை பலன்தரும் மரங்களும் தனித்தனியே ஏலமிடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவணித்தொகை ரூ.3 ஆயிரத்துக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்குப்பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு 4-1-2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கார்டு அல்லது ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 19-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். 5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

    வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.

    ஒரு விண்ணப்பதாரின் பெயரில் உள்ள வரைவோலையை மற்றவரின் பெயரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட மாட்டாது. ஏலம் எடுத்தவர் ஏலம் கோரிய முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    செலுத்த தவறினால் அவரால் செலுத்தப்பட்ட டேவணித்தொகையை இழக்க நேரிடும்.

    தவிர்க்க இயலாத காரணத்தால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள விருட்ச வனம் மரங்கள் சரணாலயத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    "வன வளத்தை பெருக்கினால் அது நாட்டு வளத்தைக் கூட்டும்" தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பேணிக்காக்கும் நோக்கத்துடனும் இயற்கையாக வளர்ந்து வரும் உள்ளூர் மரங்கள், அரிய வகை மர வகைகள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உதவியாக உள்ள மரங்களை பேணிப் பாதுகாக்கவும், வளரும் தலைமுறையினருக்கும் மற்றும் அனைவருக்கும் மர வகைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் மரங்களை சேகரித்து ஒரே இடத்தில் அவற்றை நடவு செய்து பாதுகாக்கும் வகையில் திருமலைசமுத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 15.9.2021 அன்று தொடங்கப்பட்டது.

    இந்த விருச்சவனத்தில் நெட்டிலிங்கம், மடகாஸ்கர் பாதாம், கருங்காலி, வெள்ளை கருங்காலி, உசிலை மரம், கோணப்புளி, இலுப்பை, புன்னை, சப்போட்டா, நார்த்தை, மலைவேம்பு, வெங்காரை, சில்வர் டிரம்பட், வெப்பாலை, கூட்டுப்பின்னை, வாட்டர் ஆப்பிள், கிடாரங்காய், புரசு, ஆப்பிள், புளுமேரியா வெள்ளை, காட்டு பின்னை, அரசமரம், மஞ்சக்கடம்பு, வெண்தேக்கு,

    குரங்கு வெற்றி லை, அத்திமரம், இலந்தை, நறுவிளி, பலா, புளுமேரியா சிவப்பு, தான்றிக்காய், பரம்பை, கருவாலி, தடசு, இத்தி இச்சி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, ஆட்டுக்கொம்பொடி மரம், திருஓடு (உருண்டை), வெல்வெட்மரம், வன்னிமரம், வெள்ளை மந்தாரை, காசி வில்வம், மாவிலங்கை, ருத்ராட்சம்,

    திருஓடுநீளம், சிலோன் வுட், புளிச்சக்காய், மர தொரட்டி, கிளுவை, காட்டரசு, நஞ்சுண்டான், காட்டு துவரை, முள்ளில்லா மூங்கில், டிராகன் பழம் உள்பட 216 மர வகைகளை உள்ளடக்கிய "விருட்ச வனம்" என்ற மரங்கள் சரணாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதோடு மட்டுமில்லாமல் இந்த சரணாலயத்திலே பன்முக த்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை பள்ளி மாணவ மாணவ செல்வங்கள் சிறுவயதிலே அறியும் வகையில் காய்கறி தோட்டம், புங்கனூர் பசு, காளை, முயல் பண்ணை, உலகின் சிறிய கோழி வகையான மலேசிய செராமா கோழிகள், வாத்துகள், மீன் பண்ணை அமைந்துள்ளது.

    விரைவில் 100 நபர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சரணாலயத்தில் அமையப் அமையப்பெறவுள்ளது.

    இதன் மூலம் இயற்கை மரவகைகள் பாதுகாக்க ப்படுவதோடு சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவத்தை இதனை காண வரும் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள்மற்றும் பொது மக்கள் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து மரம் வளர்ப்பதில்ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்து டன் விருட்சவனம் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், (வருவாய்) மரு.சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சங்கர், தாசில்தார் மணிகண்டன், திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மூலிகை பண்ணை அமைக்க பூமி பூஜை நடந்தது.
    • யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டாப்ப நாயக்கனூர் ஊராட்சியில் உள்ள குன்னூத்துப்பட்டியில் மதுரை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ மூலிகை பொருட்கள் பண்ணை அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.

    யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

    வேளாண்மை ஆத்மா குழு தலைவர் சுதந்திரம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் உதயகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சிவசங்கர், உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் கண்ணன், வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் மகேந்திரன், உயிரியல் தொழில்நுட்பத் துறை ரேணுகா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×