search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cashew"

    • எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர்.
    • முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு தோட்ட பயிரான முந்திரியை பயிரிட்ட விவசாயிகள் அவர்கள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காத நிலையில் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பெய்த பனிப்பொழிவு அதனைத் தொடர்ந்து கடுமையான வெயில் ஆகியவற்றின் தாக்கத்தால் பூக்கள் அனைத்தும் கருகி காய்பிடிக்கவில்லை. இதனால் முந்திரி விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, முந்திரி பயிர் மூலம் கிடைக்கும் மகசூல் கிடைக்க முடியாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளின் இழப்பீட்டை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும்.
    • ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையை அடுத்த நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள 186 எண்ணிக்கை பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-24-ம் ஆண்டிற்கு அனுபவம் செய்ய பொது ஏலம் அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் நடைபெறுகிறது.

    ஏலம் அரசு விதிமுறை களின்படி நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதா ரர்கள் முன்வைப்புத்தொ கையாக ரூ.10 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும்.

    வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும். ஒரு ஏலதாரரிடம் இருந்து ஒரு வரைவோலை மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனுமதி டோக்கன்கள் வழங்கப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பிவைக்கப்படும்.

    ஏலம் எடுத்த மரங்களின் விளைபயனை அங்கீகரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே அனுபவிக்க இயலும்.

    ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

    ஏலத்தை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×