search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    கோப்பு படம்.

    கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் பொதுமக்கள் பாதிப்பு

    • பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
    • கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன.

    திருப்பூர்:

    பொங்கலூா் பகுதியில் கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோழிப் பண்ணைகளில் காணப்படும் ஈக்கள் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பரவியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியதையடுத்து கோழிப் பண்ணை உரிமையாளா்கள் ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தினா்.

    இந்நிலையில், மீண்டும் கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே, கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.

    Next Story
    ×