search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur"

    • மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.
    • மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிய 2 நாட்களே உள்ளதால் நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காவிரி ஆற்றில் வெகு நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், பின்னர் பூங்காவில் பொழுதை கழித்தனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர்.

    சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவு அருந்தியும் ஓய்வு எடுத்தும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் அதிக விற்பனை காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர். இதனால் மீன் வியாபாரம் களை கட்டியது.

    பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் வந்திருந்ததால் மேட்டூர் - கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டண மாக 56 ஆயிரத்து 475 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 886 பேர் வந்து சென்றனர்.

    • கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது.
    • இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதிகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் நாகமரை பெண்ணாகரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு பரிசல் மற்றும் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து திடீர் திடீரென அதிகரித்து வருகிறது.

    இதனால் கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் இருந்து இயக்கப்பட்ட விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம் நாகமரை, பென்னாகரம், பூச்சியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை போக்குவரத்து மூலம் மேட்டூர், தர்மபுரி வழியாக சென்று வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட மீனவர்கள் மேட்டூர் மீனவ கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்று மீன்பிடிப்புத் தொழில் நடத்தி வருகிறார்கள். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க இயலாத நிலமை ஏற்பட்டுள்ளது. மேலும் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளதால் மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி உள்ளது. இதனால் மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . 

    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேரவில்லை என்று அய்யாகண்ணு புகார் மனு அளித்துள்ளார்.
    • பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அய்யாகண்ணு புகார்

    திருச்சி:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் இன்று திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால் முசிறி தாலுகாவில் உள்ள மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 ஆயிரம் கன அடி நீர் திறக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    எடப்பாடி, மேட்டூரில் கனமழை பெய்து வருகிறது.
    சேலம் :

    சேலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி, மேட்டூரில் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக  இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடியில் அதிகபட்சமாக 13 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    மேட்டூரில் 8.6,கெங்கவல்லி 7.6 ஆத்தூர் 4.6 சங்ககிரியில் 3 மில்லி மீட்டர் என மழை பதிவாகி உள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை  சேலத்தில் வெயில் வெளுத்து வாங்கியபடி இருந்தது.
    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ். தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், (வயது 48).

    இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது கோபால கிருஷ்ணன் இங்கிருந்து மாற்றுப்பணிக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அவர், பவானி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 8.40 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கோபால கிருஷ்ணன் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து, மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார், சம்பந்தப்பட்ட ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (34) என்பவரை கைது செய்தனர்.

    விபத்தில் பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேட்டூர் புதிய அனல் மின் நிலைய பாய்லரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் பழைய மற்றும் புதிய மின் நிலையங்கள் உள்ளன. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதே போல புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு புதிய அனல் மின் நிலைய பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனாலும் இன்று காலை வரை புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கவில்லை. இதனால் அந்த அனல் மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
    மேட்டூரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது.

    இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாகவும், பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஊரக நலப்பணிகள் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகரன், முதுநிலை எக்ஸ்ரே மருத்துவர் நடராஜன் மற்றும் குழுவினர் அந்த மருத்துவ மனையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேன் செய்த கர்ப்பிணி பெண்களின் பட்டியல் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமலும், தனி தாளிலும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்கேன் செய்த படங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

    மருத்துவமனை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. #MetturDam #MullaPeriyar #Vaigai
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் கேரளாவிலும் மிக பலத்த மழை பெய்கிறது.

    இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை 2 முறை நிரம்பியது.

    காவிரியில் தற்போது வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன.

    மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு, அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய 9 அணிகள் நிரம்பி வழிகின்றன. முல்லை பெரியாறு அணை முழு கொள்ளளவான 152 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி தற்போது 142 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


    இவை தவிர வைகை மற்றும் திருமூர்த்தி அணைகள் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 63.74 அடி தண்ணீர் உள்ளது. 60 அடி உயரமுள்ள திருமூர்த்தி அணையில் 52.21 அடியும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 79.6 அடியும் தண்ணீர் உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த 3 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் அங்கு முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி அணையில் பழுதடைந்த ஒரு மதகு இன்னும் சரிசெய்யப்படவில்லை. எனவே அங்கும் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூரில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எடப்பாடியில் 3 முகாம்களும், சங்ககிரியில் 3 முகாம்களும் பொதுமக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரம் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களில் வந்து தங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஒகேனக்கல் அருவியில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரம் கட்டப்பட்டு வரும் 31 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    நாமக்கல், பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையில் குறிச்சி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நொய்யல் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. தாமிரபரணி மற்றும் பரளியாறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #MetturDam #MullaPeriyar #Vaigai
    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி ஆறு பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடையும்.

    பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

    கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.

    கரூர் அருகே ஸ்ரீராம சமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.

    அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்துவிரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

    தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும். #Metturdam #Cauvery

    காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Karur #Thanjavore #FloodAlert
    கரூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் இருந்து இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
      
    இந்நிலையில், காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர் மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். #Karur #Thanjavore #FloodAlert
    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது.

    தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடினர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வாணிஸ்ரீ, மைதிலி சரவணன், ரவீனா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மாயமான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம எனவும் தெரிவித்துள்ளார். #Mettur #Cauvery
    ×