என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cm edappadi palaniswamy
நீங்கள் தேடியது "cm edappadi palaniswamy"
கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய மந்திரி நிதின் கட்கரி டுவிட்டர் செய்தியில், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #EdappadiPalaniswamy
சேலம்:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சுற்றுலா மாளிகையில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-
கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது?
பதில்:- தி.மு.க.வின் மூத்த தலைவரான கருணாநிதி அவர்கள் நேற்று வீட்டிலயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவில் ரத்த உயர் அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் குணமடைந்து வருகிறார். ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

கே:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மருத்துவ உதவிக்கு தமிழக அரசிடம் ஏதாவது உதவி கேட்டார்களா?

கே:- சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள் என்ன?
ப:- திருவாக்கவுண்டனூர்- ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சேலத்தில் 5 ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம், சேகோசர்வ் அருகே இரும்பாலை பிரிவு ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரம். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க அம்மா இருக்கும்போதே அவர்களிடம் தெரிவித்தோம். அவர் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கினார்.
அதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எந்த அளவுக்கு வேகமாக பணிகள் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
முள்ளுவாடி கேட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மணல் மேட்டில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் ரெயில்வே பாதைகளில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கைன் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்பட சில இடங்களில் விரைவில் பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆத்தூர் புறவழிச்சாலை அமைக்க அம்மா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல தாரமங்கலம் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கே:- கரியகோவில் - கோமுகி அணை இணைக்கப்படுமா?
ப:- தமிழகம் முழுவதும் இதுபோல திட்டங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அரசுக்கு அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பிறகு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
கே:- சேலத்தில் பஸ்போர்ட் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?
ப:- பஸ்போர்ட் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசிடம் எடுத்துக்கூறி விரைவில் அதற்கான பணத்தைப் பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiUnwell #KauveryHospital #EdappadiPalaniswamy
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சுற்றுலா மாளிகையில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-
கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது?
பதில்:- தி.மு.க.வின் மூத்த தலைவரான கருணாநிதி அவர்கள் நேற்று வீட்டிலயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவில் ரத்த உயர் அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் குணமடைந்து வருகிறார். ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

கே:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மருத்துவ உதவிக்கு தமிழக அரசிடம் ஏதாவது உதவி கேட்டார்களா?
ப:- முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வின் நீண்ட கால தலைவராகவும் கருணாநிதி உள்ளார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதுவரை அவர் தரப்பில் அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. அப்படி கேட்டால் அரசு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.
கே:- நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ப:- உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி மத்திய அரசு நீட் தேர்வு விஷயத்தில் செயல்பட்டு வருகிறது. அது தமிழக பிரச்சினை மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் பிரச்சினை ஆகும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ப:- உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி மத்திய அரசு நீட் தேர்வு விஷயத்தில் செயல்பட்டு வருகிறது. அது தமிழக பிரச்சினை மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் பிரச்சினை ஆகும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கே:- சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள் என்ன?
ப:- திருவாக்கவுண்டனூர்- ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சேலத்தில் 5 ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம், சேகோசர்வ் அருகே இரும்பாலை பிரிவு ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரம். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க அம்மா இருக்கும்போதே அவர்களிடம் தெரிவித்தோம். அவர் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கினார்.
அதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எந்த அளவுக்கு வேகமாக பணிகள் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
முள்ளுவாடி கேட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மணல் மேட்டில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் ரெயில்வே பாதைகளில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கைன் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்பட சில இடங்களில் விரைவில் பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆத்தூர் புறவழிச்சாலை அமைக்க அம்மா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல தாரமங்கலம் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கே:- கரியகோவில் - கோமுகி அணை இணைக்கப்படுமா?
ப:- தமிழகம் முழுவதும் இதுபோல திட்டங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அரசுக்கு அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பிறகு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
கே:- சேலத்தில் பஸ்போர்ட் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?
ப:- பஸ்போர்ட் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசிடம் எடுத்துக்கூறி விரைவில் அதற்கான பணத்தைப் பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiUnwell #KauveryHospital #EdappadiPalaniswamy
பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை அ.தி.மு.க. தொடங்கிவிட்டதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ParliamentElections #EdappadiPalaniswamy
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வண்டலூர் பூங்காவில் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்கள் நடப்பட்டு வருகிறது. மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புலிகளை கண்டு ரசிக்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குடிமராத்து திட்டம் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ஏரி குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு 1511 ஏரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்விக்கு ஆணையம் அமைப்பது மாநில அரசை பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்புவார்கள்.
நமக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடிதான் நாம் செயல்படுவோம். ஏனென்றால் 2 மாதத்துக்கு முன்பு கடுமையான குடிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
அப்போது குடிநீருக்காக 3 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க தயாராகி விட்டதா?
பதில்:- பாராளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. அடுத்த வருடம் மே மாதம்தான் வர உள்ளது. எங்களது பணியை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.
மதுரையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுடன் பேரணி நடத்தினோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 2 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயிரம் பேர் சைக்கிளில் சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகின்றனர்.
எனவே எங்களை பொறுத்தவரை மதுரையில் அன்றைய தினமே பிரசாரம் துவக்கப்பட்டு விட்டது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக மற்ற மாநில முதல்- அமைச்சர்கள் எடுத்து கூறும் கருத்து நமது மாநிலத்துக்கு பொருந்தாது. ஏனென்றால் நமது மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். நாம் யாருடனும் கூட்டு கிடையாது. நாம் யாருக்கும் எதிரியும் கிடையாது.
எனவே நம்முடைய மாநில மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது நமது மாநில பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளனர்.

காவிரி பிரச்சனை வந்தபோது நம்முடைய தமிழக எம்.பி.க்கள்தான் 22 நாட்கள் பாராளுமன்றமே செயல்பட முடியாத அளவுக்கு நாம் அழுத்தம் கொடுத்தோம். அப்போது எந்த மாநில முதல்-அமைச்சராவது நமக்கு ஆதரவு கொடுத்தார்களா? தேர்தலை பொறுத்தவரை கூட்டணி பற்றி அந்த சந்தர்ப்பத்தில் தான் முடிவு செய்வோம்.
தேர்தல் கூட்டணிக்கு இன்னும் ஆயுத்தபணியை எந்த கட்சியும் எடுக்கவில்லை. எனவே கூட்டணி பற்றி தேர்தல் காலத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElections #ADMK #EdappadiPalaniswamy
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வண்டலூர் பூங்காவில் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்கள் நடப்பட்டு வருகிறது. மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புலிகளை கண்டு ரசிக்க பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குடிமராத்து திட்டம் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ஏரி குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு 1511 ஏரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்விக்கு ஆணையம் அமைப்பது மாநில அரசை பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்புவார்கள்.
நமக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடிதான் நாம் செயல்படுவோம். ஏனென்றால் 2 மாதத்துக்கு முன்பு கடுமையான குடிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
அப்போது குடிநீருக்காக 3 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க தயாராகி விட்டதா?
பதில்:- பாராளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. அடுத்த வருடம் மே மாதம்தான் வர உள்ளது. எங்களது பணியை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.
மதுரையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுடன் பேரணி நடத்தினோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 2 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயிரம் பேர் சைக்கிளில் சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகின்றனர்.
எனவே எங்களை பொறுத்தவரை மதுரையில் அன்றைய தினமே பிரசாரம் துவக்கப்பட்டு விட்டது.
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக மற்ற மாநில முதல்- அமைச்சர்கள் எடுத்து கூறும் கருத்து நமது மாநிலத்துக்கு பொருந்தாது. ஏனென்றால் நமது மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். நாம் யாருடனும் கூட்டு கிடையாது. நாம் யாருக்கும் எதிரியும் கிடையாது.
எனவே நம்முடைய மாநில மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது நமது மாநில பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில் நாம் இன்றைய தினம் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் கூட்டணிக்கு இன்னும் ஆயுத்தபணியை எந்த கட்சியும் எடுக்கவில்லை. எனவே கூட்டணி பற்றி தேர்தல் காலத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElections #ADMK #EdappadiPalaniswamy
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
