search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
    X
    ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.

    மேட்டூரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு - பெண் டாக்டர் கைது

    மேட்டூரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது.

    இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாகவும், பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஊரக நலப்பணிகள் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகரன், முதுநிலை எக்ஸ்ரே மருத்துவர் நடராஜன் மற்றும் குழுவினர் அந்த மருத்துவ மனையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேன் செய்த கர்ப்பிணி பெண்களின் பட்டியல் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமலும், தனி தாளிலும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்கேன் செய்த படங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

    மருத்துவமனை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    Next Story
    ×