search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆறு பாயும் பகுதிகள்
    X

    காவிரி ஆறு பாயும் பகுதிகள்

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி ஆறு பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடையும்.

    பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

    கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.

    கரூர் அருகே ஸ்ரீராம சமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.

    அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்துவிரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

    தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும். #Metturdam #Cauvery

    Next Story
    ×