என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimutharu"

    • தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பேட்டை, பெருமாள்புரம், கே.டி.சி. நகர் பகுதிகளில் பரவலாக பெய்யும் மழையால் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாளையில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 3.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் மழை நீடித்தது. குறிப்பாக களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    அம்பையில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளில் மழை பரவலாக பெய்தபோதிலும், மேற்கு தொடர்ச்சி மழையில் குறிப்பிடத்தக்க அளவு மழை இல்லை. இதனால் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. அதேநேரம் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 50 அடி கொண்ட வடக்கு பச்சையாறு அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் அந்த அணை நீர் இருப்பு 11 அடியாகவே இருக்கிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 13.12 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதலே வானம் மேகமூட்ட மாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதி மற்றும் குண்டாறு அணையில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    85 அடி கொண்ட கடனா அணையில் 32 அடியும், 84 அடி கொண்ட ராமநதி அணையில் 46 அடியும் நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மாதக்கணக்கில் நிரம்பி வழிகிறது. 132 அடி கொண்ட அடவிநயினார் அணையில் 114 அடி நீர் இருப்பு உள்ளது.

    நேற்று மாலையில் தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை,சிவகிரி சுற்றுவட்டர கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 40 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 39 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது. வைப்பாறு சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு 56 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கோவில்பட்டி, மணியாச்சி, சூரன்குடி, விளாத்திகுளத்தில் கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    தூத்துக்குடி உப்பளங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் உப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில், மழையால் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.

    • ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது.
    • மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாச முத்திரம் சுற்றுவட்டார பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.

    புதிய பாலம்

    அதன் ஒருபகுதியாக மணிமுத்தாறு-கல்லிடைக்குறிச்சியை இணைக்கும் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பாலம் மறு சீரமைப்புக்காக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய பாலத்தை உடைக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

    இதனால் மாற்று பாதைக்காக அந்த பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதில் நீர் செல்வதற்காக குழாய் ஒன்றினை வைத்துவிட்டு அதன் மேல் மணல் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், தற்போது அந்த பகுதியில் நீர் வரத்து அதிகரித்து மண்ணரிப்பு ஏற்பட்டதால் தற்காலிக பாலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    விரைந்து முடிக்க வேண்டும்

    இதன் காரணமாக மணிமுத்தாறு ஜமீன் சிங்கம்பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு காவல் படையினரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே தற்காலிக பாலத்தை தரமாக அமைத்து, புதிய பாலம் வேலையையும் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. #MetturDam #MullaPeriyar #Vaigai
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் கேரளாவிலும் மிக பலத்த மழை பெய்கிறது.

    இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை 2 முறை நிரம்பியது.

    காவிரியில் தற்போது வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன.

    மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு, அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய 9 அணிகள் நிரம்பி வழிகின்றன. முல்லை பெரியாறு அணை முழு கொள்ளளவான 152 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி தற்போது 142 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


    இவை தவிர வைகை மற்றும் திருமூர்த்தி அணைகள் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 63.74 அடி தண்ணீர் உள்ளது. 60 அடி உயரமுள்ள திருமூர்த்தி அணையில் 52.21 அடியும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 79.6 அடியும் தண்ணீர் உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த 3 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் அங்கு முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி அணையில் பழுதடைந்த ஒரு மதகு இன்னும் சரிசெய்யப்படவில்லை. எனவே அங்கும் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூரில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எடப்பாடியில் 3 முகாம்களும், சங்ககிரியில் 3 முகாம்களும் பொதுமக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரம் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களில் வந்து தங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஒகேனக்கல் அருவியில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரம் கட்டப்பட்டு வரும் 31 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    நாமக்கல், பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையில் குறிச்சி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நொய்யல் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. தாமிரபரணி மற்றும் பரளியாறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #MetturDam #MullaPeriyar #Vaigai
    கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    திருநெல்வேலி:

    கார்பருவ சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்துவிடப்படும்.

    இந்தாண்டு கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி ஜூன் 24-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், நாங்குனேரி உள்ளிட்ட பகுதிகளில் 20,729 ஏக்கர் நிலம் பயன்பெரும். #tamilnews
    ×