search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady"

    • மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • அன்னூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் சேவூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இளம்பெண் தனது குடும்பத்துடன் கோவை மேட்டுப்பாளையம் குமாரகவுண்டன்புதூரில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இளம்பெண்ணுக்கு அங்கு வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் 3 குழந்தைகளுடன் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது இளம்பெண் 3 குழந்தைகளுடன் வாலிபருடன் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் குழந்தைகளுடன் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை மீட்டு தரும்படி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 குழந்தைகளை அழைத்துக் ெகாண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • விருப்பப்பட்டவருடன் செல்கிறேன்-என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம்
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபருடன் இளம்பெண் அடிக்கடி கணவருக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்தார். சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வந்து வீட்டில் பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இளம்பெண் வெளியே செல்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி கட்டிலில் வைத்திருந்தார்.

    அதை எடுத்து இளம்பெண்ணின் கணவர் படித்தார். அதில் நான் விருப்பப்பட்ட வாலிபருடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதி இருந்தார்.இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கணவருடன் கருத்து வேறுபாடு எதிரொலி
    • அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.ஆர்.எம்.வீதியை சேர்ந்தவர் முரளி.

    இவரது மனைவி செல்வி (வயது42). இவர்களுக்கு சஞ்சய்ராம் (14) என்ற மகனும், ஆத்மிகா(5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் செல்வி, தனது கணவரிடம், நம் குழந்தைகளுடன் நாம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறியுள்ளார்.

    அதற்கு முரளி, தனது தாயை தனியாக விட்டு, நான் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தனிக்குடித்தனம் வர மறுப்பு தெரிவித்து விட்டு வெளியில் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து, டீயில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். அதன்பின்னர் தானும் அதனை அருந்தினார். சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த முரளி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • போலீசில் கணவர் புகார் அளித்ததால் உண்மை அம்பலம்
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் இளம்பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனையடுத்து இளம்பெண் கள்ளக்காதல னுடன் ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் அவர் அந்த வாலிபரை விட்டு பிரிந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் செ ன்றார்.

    அவரையும் பிரிந்து மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூடலூரை சேர்ந்த உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இளம்பெண் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உறவினருடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு வந்த இளம்பெண்ணின் கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக உறவினருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெற்ேறார் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர் பொள்ளாச்சியில் கணினி பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல்லை சேர்ந்தவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருபவருமான 27 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தார். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இளம் பெண்ணுக்கு மணமகனை தேடி வந்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த 27-ந் தேதி இளம் பெண்ணின் காதலன் விடுமுறையில் நாமக்கல்லுக்கு வந்தார்.

    இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண் தனது பெற்றோரிடம் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு நாமக்கல்லுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை பார்க்க சென்றார். வெளியே சென்ற இளம்பெண் நீண்ட நேரம் ஆகியும திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி நாமக்கல்லுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் இளம் பெண்ணை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்
    • திருமணம் ஆகாத கள்ளக்காதலுடன் ஓட்டம்

    கோவை,

    ஆனைமலையை சேர்ந்த வர் 45 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ரெஸ்டாரண்டில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அவருடன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்த திருமணமாகாத வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை அங்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கணவரிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண் தனது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்

    • இளம்பெண் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கணவரிடம் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
    • கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கு அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இளம்பெண்ணின் கணவர் அவரிடம் கோபித்துக்கொண்டு கோவில்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை தேட வேண்டாம் எனவும், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவி, மகனை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை, செப்.28-

    கோவை சூலூர் பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34).

    இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    அதனை அவர் சரியாக திருப்பி தரமால் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஹேமலதாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட வேதனையில் ஹேமலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   

    • வள்ளியூர் அருகே உள்ள குமாரர் குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 38).
    • நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள குமாரர் குடியிருப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 38). விவசாயி.

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்த ரமேஷ், நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தன்னிடம் இருந்த ரூ.3 லட்சத்தை கடனாக ஒரு பெண்ணிடம் கொடுத்ததாவும், தற்போது அந்த பெண் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரமேசுக்கு ஏதேனும் கடன் ஏற்பட்டு, அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு பள்ளிக்கூட சாலை தெருவை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (30). இவர் மணிமுத்தாறு பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தற்காலிகமாக பணி செய்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகள், மற்றும் மகன் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சுகந்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுகந்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    சுமதி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த செல்வராஜ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றவே செல்வராஜ் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த சுமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சுமதி கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×