search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்
    X

    அன்னூர் அருகே 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்

    • மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • அன்னூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் சேவூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இளம்பெண் தனது குடும்பத்துடன் கோவை மேட்டுப்பாளையம் குமாரகவுண்டன்புதூரில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இளம்பெண்ணுக்கு அங்கு வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் 3 குழந்தைகளுடன் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது இளம்பெண் 3 குழந்தைகளுடன் வாலிபருடன் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் குழந்தைகளுடன் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை மீட்டு தரும்படி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 குழந்தைகளை அழைத்துக் ெகாண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×