search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோவையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை, செப்.28-

    கோவை சூலூர் பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34).

    இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    அதனை அவர் சரியாக திருப்பி தரமால் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஹேமலதாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட வேதனையில் ஹேமலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×