search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பாளையம் அருகே ஒரு ஆண்டில்  3 பேருடன் ஓட்டம் பிடித்த பெண்
    X

    கோவில்பாளையம் அருகே ஒரு ஆண்டில் 3 பேருடன் ஓட்டம் பிடித்த பெண்

    • போலீசில் கணவர் புகார் அளித்ததால் உண்மை அம்பலம்
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் இளம்பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனையடுத்து இளம்பெண் கள்ளக்காதல னுடன் ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் அவர் அந்த வாலிபரை விட்டு பிரிந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் செ ன்றார்.

    அவரையும் பிரிந்து மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூடலூரை சேர்ந்த உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இளம்பெண் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உறவினருடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு வந்த இளம்பெண்ணின் கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக உறவினருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    Next Story
    ×