search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு பள்ளிக்கூட சாலை தெருவை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (30). இவர் மணிமுத்தாறு பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தற்காலிகமாக பணி செய்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகள், மற்றும் மகன் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சுகந்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுகந்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×