search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

    தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    சுமதி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த செல்வராஜ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றவே செல்வராஜ் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த சுமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சுமதி கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×