search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LS Polls"

    • பாஜக கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 9 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.
    • சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. 48 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத் பவார் கட்சி இணைந்து பாஜக கூட்டணி பலத்த அடி கொடுத்தது. 30 தொகுதிகளை வென்று அசத்தியது.

    இந்த நிலையில் இன்று மூன்று கட்சிகள் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சரத் பவார் "அரசியல் சூழ்நிலையை மகா விகாஸ் அகாதிக்கு சாதகமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

    மோடி மற்றும் பாஜக 18 தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் 15 தொகுதிகளில் தோல்வியடைந்தது. சரத் பவார் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அஜித் பவார் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    கடந்த முறை 23 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    • மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி- சரத் பவார்.
    • மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்- காங்கிரஸ் தலைவர்.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    சரத் பவார் "மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவ சேனா (UBT) 9 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே கட்சி 21 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) 10 இடங்களில் போட்டியிட்டது.

    பாஜக போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

    மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி பெறமுடியவில்லை. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 290 தொகுதிகளை பிடித்துள்ளது.

    இந்தி பெல்ட் என கருதப்படும் மாநிலங்களிலும் பாஜக-வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

    இந்த தேர்தலில் சில மாநிலங்களில் கட்சி அல்லது கூட்டணி முழுமையான அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக 29 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடியது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் 4 தொகுகளில் தனித்து போட்டியிட்டது. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 5 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஐந்து தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • மாவட்ட கலெக்டர்கள் மீது யாராவது ஒருவரால் செல்வாக்கு செலுத்த முடியுமா?.
    • வதந்தி பரப்பி எல்லோர் மீதும் சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஜூலை 1-ந்தேதி) முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 150 மாவட்ட கலெக்டர்களுடன் பேசினார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.

    மாவட்ட கலெக்டர்கள்தான் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவின் போது முறைகேடு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி ராஜிவ் குமார் கூறியதாவது:-

    மாவட்ட கலெக்டர்கள் மீது (தற்போது தேர்தல் அதிகாரி) யாரேனும் ஒருவர் செல்வாக்கு செலுத்த முடியுமா?. யார் செய்தது என்று எங்களிடம் யார் என்று சொல்லுங்கள். யார் செய்தாலும் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். வதந்தி பரப்பி ஒவ்வொருவர் மீது சந்தேகத்தை கிளப்புவது சரியானது அல்ல.

    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். கட்டுப்பாட்டு பிரிவுகளின் இயக்கங்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும்.

    இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

    குற்றச்சாட்டு தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

    • பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
    • கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது- சசி தரூர்.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், கருத்துக் கணிப்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை.

    இந்த நிலையில் திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் "இந்தியா கூட்டணி எளிதாக சுமார் 300 இடங்களை பிடிக்கும்.

    பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்" என்றார்.

    கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில் "நான் எந்தவொரு கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கூறுகையில் "மக்களின் தீர்ப்பிற்காக காத்திருப்போம். எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. நாங்கள் முற்போக்கு அரசியல், வேலைவாய்ப்பு, வெளிநாடு கொள்கை உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளொம். மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்" என்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறுகையில் "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் அறிவியல் சார்ந்தவை கிடையாது. கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது.

    உண்மையான கருத்துக்கணிப்பில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கர்நாடகாவில் பாஜக கணிசமான அளவு தோல்வியடையும். கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் நிச்சயமாக வெற்றி பெறாது" என்றார்.

    • தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் மக்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாக்களித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா வாக்களித்துள்ளது. தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    அவர்களின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் நமது தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதி செய்கிறது. இந்தியாவின் நரி சக்தி மற்றும் யுவ சக்தி ஆகியவற்றை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். தேர்தலில் அவர்கள் வலுவாக இருப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

    அவர்கள் (வாக்காளர்கள்) எங்களின் சாதனைகளையும், ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தையும் பார்த்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுக்க வாக்களித்திருப்பார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும்.

    சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி வாக்காளர்களை ஒருங்கிணைக்க தவறிவிட்டது. அவர்கள் சாதி வெறி, வகுப்புவாத மற்றும் ஊழல்வாதிகள். இந்த கூட்டணி வாரிசு அரசியலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தேசத்திற்கான எதிர்கால பார்வையை முன்வைக்கத் தவறிவிட்டது.

    மோடி வசை பாடுதல் என்ற ஒரே விசயத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.

    எங்களின் வளர்ச்சி திட்டங்களை மிக நுணுக்கமாக மக்களுக்கு விளக்கி அவர்களை வாக்களிக்க தூண்டியதற்காக ஒவ்வொரு பாஜக தொண்டரையும் நான் பாராட்டுகிறேன். இவர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய பலம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் 70 தொகுதிகள் வரை பிடிக்கும் வரை தகவல்.
    • ஆந்திராவில் 22 இடங்கள் வரை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

    பாஜக கூட்டணியால் 200 இடங்களை தாண்ட முடியாது என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

    பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாக பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாக பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த மாநிலங்கள் கைக்கொடுத்தன என்பதை பார்ப்போம்.

    ஆந்திரா

    ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

    தற்போது கருத்துக் கணிபபில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 இடங்கள் என்றால் பாஜக கூட்டணிக்கு 19 இடங்கள் அதிகரிக்கும். இது மிகப்பெரிய வித்தியாசத்தை பாஜக கூட்டணிக்கு கொடுக்கும்.

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்காளத்தில் பாஜக கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாக பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 4 இடங்கள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    உத்தர பிரதேசம்

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களை பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 இடங்கள் கிடைக்கும்.

    தெலுங்கானா

    17 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கடந்த முறை 4 தொகுதிகளை பிடித்தது. 10 தொகுதிகள் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது.
    • மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு லாலு கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக திடீரென லாலு கட்சி உடனான தொடர்பை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக-வுடன் உறவை புதுப்பித்துக் கொண்டார்.

    இதனால் நிதிஷ் குமாரை லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து என்டிஏ கூட்டணி ஆட்சியை இழந்தபின் நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறிகையில் "மோடி தோல்வியடைந்து விட்டார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது. நாடு புதிய அரசை பெறப்போகிறது. என்னுடைய மாமா நிதிஷ் குமாரை பற்றி ஒரு விசயத்தை சொல்லப் போகிறேன். மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை என்டிஏ கூட்டணி இழந்த பிறகு அவர் மிகப்பெரிய முடிவை எடுக்கலாம்.

    துரோகம் செய்தது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம், தற்போது என்னுடைய கணிப்பு அவருடைய கட்சியை காப்பாற்றுவதற்காகவும், அவருடைய ஓபிசி ஆதரவு அரசியலை பாதுகாக்கவும் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என்பது எனது கணிப்பு. ஜூன் 1-ந்தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்" என்றார்.

    • ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
    • மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பராசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. சமரச அரசியல் மற்றும் வாக்கு ஜிஹாத் வசதிக்காக ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அந்த கட்சி பறித்து விட்டது. மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.

    துரோகத்தையும், பொய்களையும் வெளிப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது என்பதற்கு நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது சிறந்த சாட்சி. நீதித்துறையை இந்த கட்சியால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். நீதித்துறை மற்றும் நம்முடைய அரசியலமைப்பு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? அவர்கள் நீதிபதிகளை தாக்கும் முறை இதுவரை இல்லாததாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது.
    • இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர், ஜம்மு ஆகிய ஐந்து மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

    இந்த ஐந்து தொகுதிகளிலும் கடந்த 35 வருடங்கள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் போட்டியிடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த அளவிற்கு தேர்தலில் பங்கேற்றுள்ளது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையானதாகும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருகிறது எனத் தெிவித்துள்ளார்.

    ஐந்து தொகுதிகளிலும் 58.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது. தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகரில் 38.49 சதவீத வாக்குகள், பாரமுல்லாவில் 59.1 சதவீத வாக்குகள், அனந்த்நாக்-ரஜோரியில் 57.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    உதம்பூர் தொகுதியில் 68.27 சதவீத வாக்குகளும், ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் 83 சட்டமன்ற இடங்கள் 90 ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது.
    • வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தின் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது

    தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

    இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது

    வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. அரக்கோணம்

    மொத்த வாக்குகள் - 1562871

    பதிவான வாக்குகள் -1159441

    வாக்குப்பதிவு சதவீதம் - 74.19

    2. ஆரணி

    மொத்த வாக்குகள் - 1496118

    பதிவான வாக்குகள் -1133520

    வாக்குப்பதிவு சதவீதம் - 75.76

    3. சென்னை சென்ட்ரல்

    மொத்த வாக்குகள் - 1350161

    பதிவான வாக்குகள் -728614

    வாக்குப்பதிவு சதவீதம் - 53.96

    4. சென்னை வடக்கு

    மொத்த வாக்குகள் - 1496224

    பதிவான வாக்குகள் - 899367

    வாக்குப்பதிவு சதவீதம் - 60.11

    5. சென்னை தெற்கு

    மொத்த வாக்குகள் - 2023133

    பதிவான வாக்குகள் - 1096026

    வாக்குப்பதிவு சதவீதம் - 54.17

    6. சிதம்பரம்

    மொத்த வாக்குகள் - 1519847

    பதிவான வாக்குகள் - 1160762

    வாக்குப்பதிவு சதவீதம் - 76.37

    7. கோயம்புத்தூர்

    மொத்த வாக்குகள் - 2106124

    பதிவான வாக்குகள் - 1366597

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.89

    8. கடலூர்

    மொத்த வாக்குகள் - 1412746

    பதிவான வாக்குகள் - 1025298

    வாக்குப்பதிவு சதவீதம் - 72.57

    9. தருமபுரி

    மொத்த வாக்குகள் - 1524896

    பதிவான வாக்குகள் - 1238184

    வாக்குப்பதிவு சதவீதம் - 81.20

    10. திண்டுக்கல்

    மொத்த வாக்குகள் - 1607051

    பதிவான வாக்குகள் - 1143196

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.14

    11. ஈரோடு

    மொத்த வாக்குகள் - 1538778

    பதிவான வாக்குகள் - 1086287

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.59

    12. கள்ளக்குறிச்சி

    மொத்த வாக்குகள் - 1568681

    பதிவான வாக்குகள் - 1242597

    வாக்குப்பதிவு சதவீதம் - 79.21

    13. காஞ்சிபுரம்

    மொத்த வாக்குகள் - 1748866

    பதிவான வாக்குகள் - 1253582

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.68

    14. கன்னியாகுமரி

    மொத்த வாக்குகள் - 1557915

    பதிவான வாக்குகள் - 1019532

    வாக்குப்பதிவு சதவீதம் - 65.44

    15. கரூர்

    மொத்த வாக்குகள் - 1429790

    பதிவான வாக்குகள் - 1125241

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.70

    16. கிருஷ்ணகிரி

    மொத்த வாக்குகள் - 1623179

    பதிவான வாக்குகள் - 1160498

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.50

    17. மதுரை

    மொத்த வாக்குகள் - 1582271

    பதிவான வாக்குகள் - 981650

    வாக்குப்பதிவு சதவீதம் - 62.04

    18. மயிலாடுதுறை

    மொத்த வாக்குகள் - 1545568

    பதிவான வாக்குகள் - 1083243

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.09

    19. நாகப்பட்டினம்

    மொத்த வாக்குகள் - 1345120

    பதிவான வாக்குகள் - 967694

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.94

    20. நாமக்கல்

    மொத்த வாக்குகள் - 1452562

    பதிவான வாக்குகள் - 1136069

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.21

    21. நீலகிரி

    மொத்த வாக்குகள் - 1428387

    பதிவான வாக்குகள் - 1013410

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.95

    22. பெரம்பலூர்

    மொத்த வாக்குகள் - 1446352

    பதிவான வாக்குகள் - 1119881

    வாக்குப்பதிவு சதவீதம் - 77.43

    23. பொள்ளாச்சி

    மொத்த வாக்குகள் - 1597467

    பதிவான வாக்குகள் - 1124743

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.41

    24. ராமநாதபுரம்

    மொத்த வாக்குகள் - 1617688

    பதிவான வாக்குகள் - 1103036

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.19

    25. சேலம்

    மொத்த வாக்குகள் - 1658681

    பதிவான வாக்குகள் - 1296481

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.16

    26. சிவகங்கை

    மொத்த வாக்குகள் - 1633857

    பதிவான வாக்குகள் - 1049887

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.26

    27. ஸ்ரீபெரும்புதூர்

    மொத்த வாக்குகள் - 2382119

    பதிவான வாக்குகள் - 1435243

    வாக்குப்பதிவு சதவீதம் - 60.25

    28. தென்காசி

    மொத்த வாக்குகள் - 1525439

    பதிவான வாக்குகள் - 1031961

    வாக்குப்பதிவு சதவீதம் - 67.65

    29. தஞ்சாவூர்

    மொத்த வாக்குகள் - 1501226

    பதிவான வாக்குகள் - 1024949

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.27

    30. தேனி

    மொத்த வாக்குகள் - 1622949

    பதிவான வாக்குகள் - 1133513

    வாக்குப்பதிவு சதவீதம் - 69.84

    31. தூத்துக்குடி

    மொத்த வாக்குகள் - 1458430

    பதிவான வாக்குகள் - 975468

    வாக்குப்பதிவு சதவீதம் - 66.88

    32. திருச்சிராப்பள்ளி

    மொத்த வாக்குகள் - 1553985

    பதிவான வாக்குகள் - 1049093

    வாக்குப்பதிவு சதவீதம் - 67.51

    33. திருநெல்வேலி

    மொத்த வாக்குகள் - 1654503

    பதிவான வாக்குகள் - 1060461

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.10

    34. திருப்பூர்

    மொத்த வாக்குகள் - 1608521

    பதிவான வாக்குகள் - 1135998

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.62

    35. திருவள்ளூர்

    மொத்த வாக்குகள் - 2085991

    பதிவான வாக்குகள் - 1430738

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.59

    36. திருவண்ணாமலை

    மொத்த வாக்குகள் - 1533099

    பதிவான வாக்குகள் - 1138102

    வாக்குப்பதிவு சதவீதம் - 74.24

    37. வேலூர்

    மொத்த வாக்குகள் - 1528273

    பதிவான வாக்குகள் - 1123715

    வாக்குப்பதிவு சதவீதம் - 73.53

    38. விழுப்புரம்

    மொத்த வாக்குகள் - 1503115

    பதிவான வாக்குகள் - 1150164

    வாக்குப்பதிவு சதவீதம் - 76.52

    39. விருதுநகர்

    மொத்த வாக்குகள் - 1501942

    பதிவான வாக்குகள் - 1054634

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.22

    • பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது- திரிணாமுல் காங்கிரஸ்
    • வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. பங்குராவில் தொகுதியில் உள்ள ரகுநாத்பூரில் ஐந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக எழுதப்பட்ட டேக் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இன்று ஐந்து வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளத.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்ட பொதுவான டேக் தொங்கவிடப்படும். வாக்கு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும்போது ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யும்போது ஹாலில் பா.ஜனதா வேட்பாளருடைய பிரதிநிதிகள்தான அங்கு இருந்தார்கள். இதனால் அவர்களுடைய கையெழுத்து மட்டும் வாங்கப்பட்டது.

    எனினும், 56,58,60,61,62 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படும்போது அனைத்து ஏஜென்ட்களும் இருந்தனர். அவர்களுடைய கையெழுத்துகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளின் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    ×