என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arvind Kejriwal"
- புகார் குறித்து விசாரித்து 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது.
- இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக பெண் எம்.பி சுவாதி மலிவால் டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்தப் புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது பங்கேற்ற பாஜக கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலித் மேயரை நியமிக்கக் கோரியும் முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
#WATCH | BJP councillors in MCD House raise slogans against Delhi CM Arvind Kejriwal on the issue of their demand for appointment of a 'Dalit' mayor and Swati Maliwal issue; House adjourned pic.twitter.com/rLJp1LA3oi
— ANI (@ANI) May 14, 2024
- ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
- இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று சில நாட்கள் ஆன நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடம் (ஏஏபி) அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளை தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும்.
இந்நிலையில், "நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு ஜூன் 5-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து திரும்புவேன்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
திகாரில் உள்ள எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அதனை 13 அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் பிரதமர் அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி என்னைக் கண்காணித்து வருகிறார். எனக்குத் தெரியவில்லை. மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று..
நான் குளியலறைக்குச் செல்வதற்காக இரவில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறேன் என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.
பிரதமர் மோடி, கெஜ்ரிவால் உடைந்துவிட்டாரா இல்லையா என்பதைப் பார்க்க விரும்பினார். கெஜ்ரிவால் மனச்சோர்வடையவில்லை. எனக்கு ஹனுமானின் ஆசீர்வாதம் இருப்பதாக நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கெஜ்ரிவால் இப்படி உடைப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் செய்யமாட்டார். மோடி ஒன்றும் கடவுள் இல்லை.
ஜூன் 2ம் தேதி திகார் சிறைக்கு திரும்பினாலும், ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
நான் கடினமாக உழைத்தால், இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன். ஆனால் இப்போது கடினமாக உழைக்காவிட்டால் மீண்டும் எப்போது சந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை - அமித் ஷா
- '75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது' என 5 வருடங்களுக்கு முன் அமித் ஷா பேசியக் காணொளியை ஆம் ஆத்மி பகிர்ந்துள்ளது
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, 'பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா?
இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?"
பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?" என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. ஆகவே பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் '75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது' என ஐந்து வருடங்களுக்கு முன் அமித் ஷா பேசியக் காணொளியை ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், "75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது என்று பிரதமர் மோடி வகுத்த விதியை அவரே பின்பற்றமாட்டார் என்று நான் நினைக்கவில்லை. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஓய்வு பெறச் செய்த விதியை பின்பற்ற மாட்டேன் என்று மோடி கூறமாட்டார். அத்வானிக்காக தான் இந்த விதி உருவாக்கப்பட்டது. இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று பிரதமர் சொல்லட்டும். பிரதமர் மோடி இதைச் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரம் மின்சாரம், இலவச கல்வி , மருத்துவம் வழங்கப்படும்.
- நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை யொட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. ஜூன் 2-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை யொட்டி தேர்தல் பிரச்சார பணிகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு அவரது எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். அப்போது கெஜ்ரிவால் 10 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :-
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.
* டெல்லி மற்றும் பஞ்சாபில், நாங்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் நாடு முழுவதும் அவ்வாறு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
* 2022 -க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி தவறி விட்டார். 2022 -க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் 24×7 மின்சாரம் வழங்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விடுங்கள். நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.
* 2022 க்குள். சபர்மதிக்கும் மும்பைக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று மோடி உத்தரவாதம் அளித்தது எதுவும் இதுவரை நடக்க வில்லை.விரைவில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
* சீனா நமது நாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மத்திய அரசு எங்கள் நிலத்திற்குள் யாரும் வரவில்லை, எதுவும் நடக்கவில்லை என்று அது கூறுகிறது. அதை விரைவில் மீட்போம்.
* நாட்டின் சுகாதாரத் துறையில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாடு முன்னேறும். 140 கோடி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவுவோம்.
* நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் பள்ளிகளில் 18 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. டெல்லியிலும், பஞ்சாபிலும், மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம், அதை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்றார்.
- ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்.
- டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து 'ரோடு ஷோ' நடத்தினார். அவர் 2 இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:-
ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். கடவுள் எனக்கு 21 நாட்கள் கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.
பா.ஜனதாவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே 400 இடங்கள் தேவை என்று பா.ஜ.க. கூறுகிறது. சர்வாதிகாரத்தை கொண்டு வரவே அவர்கள் விரும்புகிறார்கள்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு என்னை கைது செய்தது. நான் ஒரு சிறிய மனிதன். எங்களிடம் ஒரு சிறிய கட்சி உள்ளது.
டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன. இருப்பினும் டெல்லி மக்களுக்காக தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தேன். இது தவறா?
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அவர் விவாதித்தார்.
அதை தொடர்ந்து பிற்பகலில் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலை அவர் 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். மோதி நகர்,உத்தம் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. எஞ்சிய 3 இடங்களில் காங்கிரஸ் நிற்கிறது.
- கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.
- தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மெஹராஜ் சந்தையில் வாகன பேரணியில் ஈடுபட்டார்.
வாகன பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின் கெஜ்ரிவால் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார வாகன பேரணி நடைபெற்றது.
அப்போது பொது மக்கள் மத்தியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கெஜ்ரிவால் அரசை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள், சூழ்ச்சி செய்கிறார்கள்.
என்னை ஏன் அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தீர்கள்? முதல்வரான என்னை கைது செய்ததன் மூலம், நாட்டில் எவரையும் கைது செய்ய என்னால் முடியும் என அனைவருக்கும் காட்ட விரும்புகிறாரா பிரதமர் மோடி ?
தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.
நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். அவர்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம்.
எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி நினைக்கிறார்.
ஸ்டாலின் அமைச்சர்களை சிறையில் அடைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டார். மம்தா பானர்ஜியின் அமைச்சர்களையும் சிறையில் அடைத்துவிட்டார்.
ஒருவேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்டாலினையும், மம்தா பானர்ஜியையும் கூட சிறையில் அடைப்பார்கள்.
சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார் ஆகியோரின் அரசியலை முடித்தவர் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் அரசியலுக்கும் விரைவில் முடிவு கட்டுவார். ஒரே நாடு ஒரே தலைவரை தான் பிரதமர் மோடி விரும்புகிறார்.
சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒன்றிணைந்து வலிமையோடு போராட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள்.
- பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் இருந்தனர்.
அதை தொடர்ந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, 'பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா?
இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?"
பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?" என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
"75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. ஆகவே பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
- என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அதைத் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் இருந்தனர்.
அதை தொடர்ந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி. தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை.
* ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
* தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் இணைத்து வருகின்றனர். ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.
* நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன்.
* எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
* என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்.
* இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள்.
* பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்.
* பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?
* ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி இருக்கப்போவதில்லை.
* முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை.
* நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.
* பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.
* எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, எம்.எல்.கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களில் உத்தரபிரதேச முதல்வரான யோகியை மாற்றி விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.
- ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமினை நேற்று வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal received a warm welcome from his family members after he reached his residence.
— ANI (@ANI) May 10, 2024
He was released from Tihar Jail after the Supreme Court granted him interim bail till June 1.
(Source: AAP) pic.twitter.com/823356qw87
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal comes out of Hanuman Mandir in Connaught Place after offering prayers here.
— ANI (@ANI) May 11, 2024
His wife Sunita Kejriwal and Punjab CM Bhagwant Mann are also with him. pic.twitter.com/1oj9jJVGFT
இந்நிலையில், 'Jail Return Club'-ல் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்துள்ளார் என்று பா.ஜ.க. எம்.பி.யும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதான்சு திரிவேதி தாக்கி பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- 1997ல் அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், 1996ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 1996ல் கருணாநிதி, 2004-ல் சிபுசோரன் வரிசையில், 'ஜெயிலில் இருந்து திரும்பும் முதல்வர்கள்' என்ற எலைட் கிளப்பில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்துள்ளார்.
2000-ல் ஷீலா தீட்சித்தையும், சோனியா காந்தியையும் சிறைக்கு அனுப்புவோம் என்று பேசிக் கொண்டிருந்தவர், திகாரில் இருந்து திரும்பியதும் தொனி மாறிவிட்டது என்றார்.
- கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- மாவை 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திறந்த காரில் நின்று அவர்கள் மத்தியில் கெஜ்ரிவால் கூறும் போது, "சர்வாதிகாரத்துக்கு எதிராக முழு பலத்துடன் போராடுகிறேன். ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற 140 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று காலை கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் சென்றனர்.
அதை தொடர்ந்து பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 4 மணியளவில் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியிலும், 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
- ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
I am very happy to see that Shri Arvind Kejriwal @ArvindKejriwal has got interim bail. It will be very helpful in the context of the current elections.
— Mamata Banerjee (@MamataOfficial) May 10, 2024
- அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து யோசிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவிப்பு.
டெல்லி மாநல மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் மே 5-ந்தேதி (நேற்று) இருதரப்பு தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்து. அதற்கு அவர்களும் கையெழுத்திடமாட்டார் என உறுதியளித்தது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது. அடுத்த விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10-ந்தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்