என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Opposition leaders"
- ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- நாம் வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை.
- அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்ற தவறான கருத்தை பாஜக கொண்டுள்ளது.
புனே:
மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், புனேவில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளும் போது தனது அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்ற தவறான கருத்தை பாஜக கொண்டுள்ளது, என தெரிவித்தார். ஆனால் அது போன்ற தந்திரங்களுக்கு பயப்பட தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை, நாம் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் சரத்பவார் கூறினார்.
அவர்கள் செய்வது சரியல்ல, அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்று நினைக்கிறார்கள். எனக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியிருந்தது. நான் மறுநாள் காலை அலுவலகத்திற்குச் செல்ல முடிவு செய்தேன், ஆனால் அதிகாரிகள் என் இடத்திற்கு வந்து என்னைப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்குகளின் கீழ் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது.
272 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லையெனில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் உருவாகும்.
வருகிற 23-ந் தேதி 542 தொகுதிகளின் ஓட்டுக்களும் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியம் மீண்டும் பா.ஜனதா ஆட்சியில் அமருமா? அல்லது வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்பது தெரிய வரும். ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியானது.
ஆனால் 4-வது கட்ட தேர்தலுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் மாநில கட்சிகளின் கை தான் ஓங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. மாநில கட்சிகள் சுமார் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாரதிய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ அதிக இடங்கள் கிடைக்காது என்றும், எனவே மாநில கட்சிகள் உதவியுடன்தான் புதிய ஆட்சி அமைக்க முடியும் என்றும் கருத்து நிலவுகிறது.
மாநில கட்சிகளில் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. சிவசேனா, அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இடது சாரிகள் தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட சுமார் 20 மாநிலகட்சிகள் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்துள்ளன. இந்த கட்சிகள் தான் மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கர்களாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த மாநில கட்சிகள், மத்தியில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் மாறுபட்ட மனநிலையுடன் உள்ளன.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 23-ந் தேதி தேர்தல் முடிவுக்கு முன்னதாக 21-ந் தேதியே டெல்லியில் மாநில கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ், மாநில கட்சிகளின் “கூட்டாட்சி முன்னணி” (3-வது அணி)தான் மத்தியில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக உள்ளது.
பிரதமர் கனவில் இருக்கும் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரும் இதே மனநிலையில் உள்ளனர்.
ஆனால் நேற்று சந்திரசேகர ராவும், சில மாநில கட்சித் தலைவர்களும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் காங்கிரசின் ஆதரவை வெளியில் இருந்து பெறலாம் என்பதே அந்த முக்கிய முடிவாகும். இதனால் காங்கிரசும், மாநில கட்சிகளும் நெருங்கிவரத் தொடங்கியுள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் மும்முரமாகி உள்ளது. ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், கமல்நாத் போன்றவர்கள் மாநில கட்சித்தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பேச்சு நடத்தி வருகிறார்கள்.
பாரதிய ஜனதா தடாலடியாக ஏதாவது செய்வதற்கு முன்பு எல்லா மாநில கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காதும், காதும் வைத்த மாதிரி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜனதா பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
“டெல்லியில் வருகிற 23-ந் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அந்த அழைப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார். இதற்கான சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
23-ந் தேதிதான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அன்றைய தினம் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்று திரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக திரட்டும் அடித்தளம் அமைவது குறிப்பிடத்தக்கது.
சோனியாவின் இலக்குபடி கூட்டப்படும் இந்த கூட்டத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளான தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
பிஜூ ஜனதா தளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக்கை 23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள். எனவே கமல்நாத் மூலம் நவீன்பட்நாயக்கை வளைக்க முயற்சி நடந்து வருகிறது.
அது போல சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன்ரெட்டி, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரையும் 23-ந் தேதி கூட்டத்துக்கு அழைத்து வர காங்கிரசார் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகும் போது காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களைப் பொறுத்து முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றினால், அவர்களது கை ஓங்கும். அப்படி இல்லாமல் மாநில கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றினால், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும். இதில் எது நடக்கும் என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.
ஆனால் மாயாவதி, மம்தா பானர்ஜி இருவரும் பிரதமர் பதவி மீது பிடிவாதமான மனநிலையில் உள்ளனர். அதுவும் அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். எனவே தேர்தல் முடிவுகள் இவர்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்