search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arani"

    • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
    • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

    அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு சடங்குகளில் ஈடுபட்டனர்.
    • அனைவரும் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆரணி:

    கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    கேரளாவை போன்று இங்கும் நரபலி கொடுக்கப்படலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் கதவை உடைத்தனர். தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர். 


    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஆரணி அருகே பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு அய்யனார் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நேதாஜி. இவர்களது வீட்டுக்கு நடுவே மாமரம் உள்ளது. இதில் துணி காயப்போட கயிறு கட்டும் போது இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நேதாஜி கத்தியால் சர்மிளாவை வெட்டினார். இதில் சர்மிளா காயம் அடைந்தார்.

    இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேதாஜியை கைது செய்தனர்.

    திருவண்ணாமலை-ஆரணி தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK
    திருவண்ணாமலை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது.

    மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த அ.தி.மு.க.வினரிடம் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

    நேற்று திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த நேர்காணலில் வனரோஜா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் உள்பட 43 பேர் பங்கேற்றனர்.

    ஆரணி தொகுதிக்கு நடந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா உள்பட 57 பேர் கலந்து கொண்டனர்.

    2 தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK

    ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    சேத்துப்பட்டு அருகே உள்ள நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 46). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர்.

    ஜெயசந்திரன் இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆரணியில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். விண்ணமங்கலம் அருகே பைக் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெயசந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி பாச்சா உடையார் தெருவில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு கோவில் வாளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு கோவில் பூசாரி சுப்பிரமணியம் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் நிவேதா (வயது 21) என்ஜினீயர். இவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிவிட்டு நேற்று கடைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் மனோகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் என்ஜினீயரை தேடி வருகிறார்கள்.

    ஆரணி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விலைகிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 30) கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு ஆரணியில் நடந்த உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

    பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் சேத்துப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீசார் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டிற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் - பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

    அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.
    மழை பொய்த்து போனதாலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதாலும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் தற்போது முற்றிலும் வறண்டு விட்டன.
    ஊத்துக்கோட்டை:

    ஆரணி ஆறு ஆந்திராவில் உள்ள நகரியில் உற்பத்தி ஆகி பிச்சாட்டூர், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. இதே போல் கொசஸ்தலை ஆறு பள்ளிபட்டு அருகே உற்பத்தி ஆகி பூண்டி வழியாக ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், தாமரைபாக்கம், அணைகட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    ஆரணி ஆறு தமிழக எல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரும், கொசஸ்தலை ஆறு சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து கடலில் சேருகிறது. இந்த 2 ஆறுகளின் ஓரமாக 550-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆற்றங்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலமாக மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    மேலும் ஆற்று நீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலமும் பயன் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பொய்த்து போனதாலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதாலும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் தற்போது முற்றிலும் வறண்டு விட்டன. இதே போல் இந்த ஆறுகளின் தண்ணீரை சேமித்து வைக்கும் பூண்டி, பிச்சாட்டூர் அணைகளும் வற்றி விட்டன. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகளும் முற்றிலும் வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளன.

    ஆறுகளில் நீர் பாயாத நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆற்றங்கரைகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டன. இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகள் வற்றி கரையோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கொசஸ்தலை ஆறு பாயும் பூண்டி அருகே உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நம்பாக்கம், மெய்யூர், மயிலாப்பூர், ராஜபாளையம், மோவூர், திருக்கண்டலம், அனைகட்டு, புன்ன பாக்கம், செம்பேடு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இதே போல் ஆரணி ஆற்று படுக்கையில் உள்ள ஊத்துக்கோட்டை, கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம், பால்ரெட்டிகண்டிகை, தாராட்சி, பாலவாக்கம், லட்சிவாக்கம், சூளமேனி, தண்டலம், ராள்ளபாடி, கொசவன் பேட்டை பகுதிகளிலும் குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    ஆரணியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 8 பணியாளர்களுக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது.
    ஆரணி:

    ஆரணி நகரில் எங்கும் குப்பை கூளமாக இருப்பதாக நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதுதொடர்பாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஸ்டான்லிபாபு, பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் தேவநாதன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் அலுவலர்களுடன் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத் தொடர்ந்து ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் தலைமையில், நகராட்சியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யார் போன் செய்தாலும் பதில் அளிக்காத சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்தும், மேலும் சுகாதார ஆய்வாளர் பாலாஜி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், மாசிலாமணி, ஜோதிவேலு, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், குத்தகை இனங்களை முறையாக வசூலிக்காத காரணத்தால் பில் கலெக்டர்கள் சரவணன், விஜயபிரபாகரன், குப்பைகளை லாரி மூலம் முறையாக அகற்றாத டிரைவர் இந்திராபாண்டியன் ஆகிய 8 பேருக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கவில்லையெனில் இவர்கள் மீதும் பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார்.

    மேலும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதிலும் வயது முதிர்ந்தோர் அதிகம் இருப்பதாலும் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் காணப்படுவதால் அவற்றை அள்ளுவதற்காக ஆற்காடு, ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வாகனத்துடன் வருகை தந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
    ×