search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Thamizhar"

    • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
    • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

    அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாம் தமிழர் கட்சி விழா ஒன்றில் பேசிய சீமான், சிம்பு நேர்மையானவர், துணிவானவர், அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று பேசினார். #Seeman #STR
    நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை கூறினேன். ஆனால் மற்றவர்கள் பயந்தார்கள். ’நான் நடிக்கிறேன் அண்ணா’ என்று சிம்பு துணிச்சலாக சொன்னார்.



    எனது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும். படம் முக்கியமான வி‌ஷயங்களை பேசும். சிம்பு நேர்மையானவர், துணிவானவர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman #STR

    நாம் தமிழர் கட்சி விழா ஒன்றில் பேசிய சீமான், என் படத்தில் அவர் நடிக்க மாட்டார், ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார் என்று விஜய்யை சாடினார். #Seeman #Vijay
    நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

    ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். அவர் தான் உண்மையான ஆண்மகன். ரஜினி, கமல் போன்றோர் ஹீரோக்கள் அல்ல. ஜீரோக்கள். உங்கள் திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக்கூடாது.



    தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கிறார்கள். நல்லகண்ணுவைத் தாண்டிய ஒரு தலைவன் இந்தியாவிலேயே உண்டா? சர்கார் படத்துக்கு அரசு தரப்பில் பிரச்சினை கொடுத்தபோது பணிந்து போகாமல் விஜய் உறுதியாக நின்று இருக்கலாம். என் படத்தில் அவர் நடிக்க மாட்டார். ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார்.

    விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த சீமான் தற்போது அவரை கடுமையாக விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்கள் சீமானை சமூக வலைதளங்களில் தாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman #Vijay

    ×