search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலி
    X

    ஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலி

    ஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    சேத்துப்பட்டு அருகே உள்ள நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 46). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர்.

    ஜெயசந்திரன் இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆரணியில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். விண்ணமங்கலம் அருகே பைக் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெயசந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×