search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple hundi"

    • பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது
    • சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். 

    ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×