என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 100 காதல்
நீங்கள் தேடியது "100 நாள் வேலை திட்டம்"
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது.
ஈரோடு:
அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டும் செல்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மக்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வெயில் அதிகமாக இருப்பதால் இளநீர், கரும்பு சாறு, மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து அதிக அளவில் இளநீர், கரும்பு சாறு கடைகளுக்கு மக்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தினமும் அதிக அளவில் நீர் பருக வேண்டும் எனவும், வெயில் காலங்களில் சூடான மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் அஜீரண வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம் என்றும்,
உடல் சூட்டை தணிக்க அதிக அளவில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சி போன்ற பழங்கள், ஜூஸ் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டும் செல்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மக்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வெயில் அதிகமாக இருப்பதால் இளநீர், கரும்பு சாறு, மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து அதிக அளவில் இளநீர், கரும்பு சாறு கடைகளுக்கு மக்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தினமும் அதிக அளவில் நீர் பருக வேண்டும் எனவும், வெயில் காலங்களில் சூடான மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் அஜீரண வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம் என்றும்,
உடல் சூட்டை தணிக்க அதிக அளவில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சி போன்ற பழங்கள், ஜூஸ் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதாக கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும் இவர்களுடைய ஊதியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.163 ஆக இருந்த சம்பளம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூ.229 ஆக தினக்கூலி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியை தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார்.
இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்கு சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன். மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.
படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிடமுடியாது என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் உணர்ந்து கொள்வார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 நபர்களுக்கு நமது மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இவர்களுடைய ஊதியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.163 ஆக இருந்த சம்பளம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூ.229 ஆக தினக்கூலி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியை தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார்.
இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்கு சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன். மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.
படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிடமுடியாது என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் உணர்ந்து கொள்வார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #HC #NGT #TNGovt
சென்னை:
சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதுபற்றிய விசாரணையின் முடிவில் வெளியான 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.
நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.
கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.
மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், ‘நீரி’ ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23-ம் தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். #HC #NGT #TNGovt
கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரியலூர்:
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் 100 பந்து கிரிக்கெட் லீக் (The Hundred) தொடரை நடத்துகிறது. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. #ECB
கிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அறிமுகம் ஆனது. அதன்பின் டி20 கிரிக்கெட் அறிமுகம் படுத்தப்பட்டது. மூன்று மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு ஏற்பட்டது.
இதனால் ஏறக்குறைய கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு வாரியங்களும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்நிலையில் 100 பந்து கிரிக்கெட் லீக் (The Hundred) தொடரை நடத்த இங்கிலாந்து முயற்சி செய்து வந்தது.
இதற்கான இறுதி வடிவம் கொடுத்து, தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் இந்தத் தொடர் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1. ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து பந்துகள் அல்லது 10 பந்துகள் வீசலாம். ஆனால், மொத்தம் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.
2. இரண்டரை நிமிடம் என தலா ஒருமுறை இரண்டு அணிகளுக்கும் இடைவேளை (strategic timeout) கொடுக்கப்படும்.
3. முதல் 25 பந்துகள் பவர் பிளேயாகும்.
4. ஐந்து வாரங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
இதனால் ஏறக்குறைய கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு வாரியங்களும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்நிலையில் 100 பந்து கிரிக்கெட் லீக் (The Hundred) தொடரை நடத்த இங்கிலாந்து முயற்சி செய்து வந்தது.
இதற்கான இறுதி வடிவம் கொடுத்து, தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் இந்தத் தொடர் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1. ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து பந்துகள் அல்லது 10 பந்துகள் வீசலாம். ஆனால், மொத்தம் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.
2. இரண்டரை நிமிடம் என தலா ஒருமுறை இரண்டு அணிகளுக்கும் இடைவேளை (strategic timeout) கொடுக்கப்படும்.
3. முதல் 25 பந்துகள் பவர் பிளேயாகும்.
4. ஐந்து வாரங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
சென்னை அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiTheft
அம்பத்தூர்:
அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார்.
இவருடைய மனைவி, ஸ்ரீதேவி. கணவன்-மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் வீட்டு வேலையாட்கள், தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிக்க கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், ரூ.1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
இதுபோல், அதே பகுதி 26 -வது தெருவில் வசித்து வருபவர் முரளிகிருஷ்ணன். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.
அண்ணாநகர் எல் பிளாக் 21-வது தெருவில் மேக்ஸ் ப்யூர் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை சுருட்டினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்து கொண்டு சென்று விட்டனர்.
அண்ணாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiTheft
அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார்.
இவருடைய மனைவி, ஸ்ரீதேவி. கணவன்-மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் வீட்டு வேலையாட்கள், தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிக்க கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், ரூ.1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை-பணம் தப்பியது.
நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.
அண்ணாநகர் எல் பிளாக் 21-வது தெருவில் மேக்ஸ் ப்யூர் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை சுருட்டினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்து கொண்டு சென்று விட்டனர்.
அண்ணாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiTheft
கோவை ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை:
இந்தியன் ரெயில்வே தென்னக ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரெயில் நிலையத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஏற்றுவதற்காக 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையில் பிரேத்யேகமாக பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரமாண்டமாக கோவை ரெயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடியை ஏராளமான ரெயில் பயணிகள் கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேசியக்கொடி முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர்.
இந்தியன் ரெயில்வே தென்னக ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரெயில் நிலையங்களில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரெயில் நிலையத்தின் முன்புறம் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தில் ஏற்றுவதற்காக 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையில் பிரேத்யேகமாக பிரமாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட தேசியக்கொடியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரமாண்டமாக கோவை ரெயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடியை ஏராளமான ரெயில் பயணிகள் கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தேசியக்கொடி முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து சென்றனர்.
குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். #MohammedShami
நேப்பியர்:
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி அபார பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தது.
இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார். #MohammedShami
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி அபார பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தது.
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி ஆட்டமிழக்கச் செய்தார். நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் விக்கெட், முகம்மது சமிக்கு 100-வது விக்கெட்டாக அமைந்தது.
இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார். #MohammedShami
கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர 1¼ லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். #GajaCyclone
சென்னை:
வறுமை ஒழிப்பு, வேலை செய்யும் உரிமை, பெண்களுக்கு சமத்துவ உரிமை ஆகிய ஊரக மேம்பாட்டு அம்சங்களுக்கு அடித்தளமிட்ட திட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமைந்துள்ளது. மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டம் தமிழகத்தில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக (சென்னை தவிர) 31 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப் பங்களிப்பு செய்கின்றன.
இந்த திட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்களுக்கு ஒருவர் வேலை பெற முடியும். பணியாற்றி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். திட்டத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஊதியம் ரூ.80 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2009-10-ம் ஆண்டில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.224ஐ எட்டியுள்ளது. இந்த ஊதியத் தொகை, பணியாளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். 18 வயதைக் கடந்த எவரும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவராவர்.
தமிழகத்தில் இந்தத் திட்டம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் வீட்டுக்கு உள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களில் 84.78 சதவீதம் பேர் இன்று இந்த திட்டத்தின் கீழ் வேலையும் ஊதியமும் பெறுகின்றனர். ஆணும், பெண்ணும் பணிக்குச் சென்று ஊதியம் பெறுவதால், சமூக, பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பம் முன்னேற்றமடைவதோடு, ஊரகப் பகுதியும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மைப் பணிகளாகும். இந்த 100 பணிகளில் 71 சம்பந்தப்பட்ட பணிகள், நீர் தொடர்புடையவை ஆகும்.
சாதாரண காலகட்டங்களில் 100 நாட்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 150 நாட்கள் வரை வேலை நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 80.74 லட்சம் பேர் பெண்கள். பதிவு செய்தவர்களில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 87.40 லட்சமாகும். அவர்களில் 67.75 லட்சம் பேர் பெண்கள்; 24.84 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்; 1.25 லட்சம் பேர் பழங்குடியினராகும்.
இந்தத் திட்டத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 4.07 லட்சம் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.3,803.74 கோடி நிதியை மத்திய அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. கட்டுமானப் பொருள் செலவீனம் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமாக ஒதுக்கப்பட்ட ரூ.842.89 கோடி தொகையில் 25 சதவீதத்தை தமிழக அரசு தனது பங்காக அளிக்கிறது.
இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. 15 நாட்களுக்குள் 99.19 சதவீதம் ஊதியம் வழங்கி அதற்கான விருதை தமிழக அரசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த வேலையை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றுதான் உடனே கைகொடுக்கும் திட்டம் என்பதால் அவர்கள் பலரும் இந்த மாவட்டங்களில் வேலை கேட்டு பெயர்ப் பதிவு செய்தனர்.
இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு பதிவு செய்து, பணியாற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி சாதாரணமாக நாளொன்றுக்கு 37 ஆயிரத்து 932 பேர் பணியாற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரத்து 68 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 55 ஆயிரம் பேரும்; 12 ஆயிரத்து 76 பேர் பணியாற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்து 924 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 48 ஆயிரம் பேரும்; 15 ஆயிரத்து 323 பேர் பணியாற்றும் நாகை மாவட்டத்தில் கூடுதலாக 42 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 58 ஆயிரம் பேரும்; 42 ஆயிரத்து 141 பேர் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 859 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 74 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் கூடுதலாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அறுத்தல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், சாலைகள் சீரமைப்பு, சேதமடைந்த அரசு கட்டிடங்கள் சீரமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக முடிவு செய்துள்ளது. #GajaCyclone
வறுமை ஒழிப்பு, வேலை செய்யும் உரிமை, பெண்களுக்கு சமத்துவ உரிமை ஆகிய ஊரக மேம்பாட்டு அம்சங்களுக்கு அடித்தளமிட்ட திட்டமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமைந்துள்ளது. மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டம் தமிழகத்தில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி அமலுக்கு வந்தது. முதலில் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக (சென்னை தவிர) 31 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப் பங்களிப்பு செய்கின்றன.
இந்த திட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்களுக்கு ஒருவர் வேலை பெற முடியும். பணியாற்றி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். திட்டத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஊதியம் ரூ.80 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறகு 2009-10-ம் ஆண்டில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.224ஐ எட்டியுள்ளது. இந்த ஊதியத் தொகை, பணியாளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். 18 வயதைக் கடந்த எவரும் இந்தத் திட்டத்தில் இணைய தகுதி உடையவராவர்.
தமிழகத்தில் இந்தத் திட்டம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் வீட்டுக்கு உள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களில் 84.78 சதவீதம் பேர் இன்று இந்த திட்டத்தின் கீழ் வேலையும் ஊதியமும் பெறுகின்றனர். ஆணும், பெண்ணும் பணிக்குச் சென்று ஊதியம் பெறுவதால், சமூக, பொருளாதார ரீதியில் அந்தக் குடும்பம் முன்னேற்றமடைவதோடு, ஊரகப் பகுதியும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மைப் பணிகளாகும். இந்த 100 பணிகளில் 71 சம்பந்தப்பட்ட பணிகள், நீர் தொடர்புடையவை ஆகும்.
சாதாரண காலகட்டங்களில் 100 நாட்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் 150 நாட்கள் வரை வேலை நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 80.74 லட்சம் பேர் பெண்கள். பதிவு செய்தவர்களில் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 87.40 லட்சமாகும். அவர்களில் 67.75 லட்சம் பேர் பெண்கள்; 24.84 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்; 1.25 லட்சம் பேர் பழங்குடியினராகும்.
இந்தத் திட்டத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 4.07 லட்சம் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.3,803.74 கோடி நிதியை மத்திய அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. கட்டுமானப் பொருள் செலவீனம் மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமாக ஒதுக்கப்பட்ட ரூ.842.89 கோடி தொகையில் 25 சதவீதத்தை தமிழக அரசு தனது பங்காக அளிக்கிறது.
இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கும் மாநிலங்களில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. 15 நாட்களுக்குள் 99.19 சதவீதம் ஊதியம் வழங்கி அதற்கான விருதை தமிழக அரசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சில மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் அதிகம் நம்பியிருந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயத் தொழில் அழிந்துவிட்டது. பயிர்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
கோப்புப்படம்
இருந்த வேலையை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றுதான் உடனே கைகொடுக்கும் திட்டம் என்பதால் அவர்கள் பலரும் இந்த மாவட்டங்களில் வேலை கேட்டு பெயர்ப் பதிவு செய்தனர்.
இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கு பதிவு செய்து, பணியாற்றுவோரின் எண்ணிக்கை தற்போது அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. அதன்படி சாதாரணமாக நாளொன்றுக்கு 37 ஆயிரத்து 932 பேர் பணியாற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதலாக 17 ஆயிரத்து 68 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 55 ஆயிரம் பேரும்; 12 ஆயிரத்து 76 பேர் பணியாற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்து 924 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 48 ஆயிரம் பேரும்; 15 ஆயிரத்து 323 பேர் பணியாற்றும் நாகை மாவட்டத்தில் கூடுதலாக 42 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 58 ஆயிரம் பேரும்; 42 ஆயிரத்து 141 பேர் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 859 பேர் சேர்க்கப்பட்டு தற்போது 74 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் கூடுதலாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அறுத்தல், வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், சாலைகள் சீரமைப்பு, சேதமடைந்த அரசு கட்டிடங்கள் சீரமைப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக முடிவு செய்துள்ளது. #GajaCyclone
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார். #Vajpayee #PMModi
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
அவரது நினைவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.
நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் மூன்று சிங்கங்கள் இருப்பதுபோன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் “சத்யமேவ ஜெயதே” என்று தேவநாகரி மொழியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
வாஜ்பாய் உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vajpayee #PMModi
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
அவரது நினைவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.
வாஜ்பாய் உருவம் கொண்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டது. அதன் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
வாஜ்பாய் உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vajpayee #PMModi
சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #100PercentKaadhal #GVPrakashKumar
நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.
சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 2019 பிப்ரவரியில், படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
A Valentine's day 2019 release it is for @gvprakash's #100percentkaadhal! Stay tuned for more updates 🥰
— Sony Music South (@SonyMusicSouth) December 20, 2018
➡️ https://t.co/JGz4cByCfMpic.twitter.com/vynSkIUNl2
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ்.ஆர். ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாகவும், மாத கூலியாகவும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமீபகாலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று காலை தொரவி கிராமம் அருகே விழுப்புரம் - திருக்கனூர் சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 100 பேர் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், ரமேஷ் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பன்ட ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விக்கிரவாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவாலி, நாராயணன் ஆகியோரும் விரைந்து வந்து இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாகவும், மாத கூலியாகவும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமீபகாலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று காலை தொரவி கிராமம் அருகே விழுப்புரம் - திருக்கனூர் சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 100 பேர் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், ரமேஷ் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பன்ட ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விக்கிரவாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவாலி, நாராயணன் ஆகியோரும் விரைந்து வந்து இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X