search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    • குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
    • முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சிவக்குமார்

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    யாசர் அராபத்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

    அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.

    தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    டேனியல் செல்வ சிங்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    • ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
    • தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆர்.என். ரவி.

    குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள் புடைசூழ வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி வந்தார். அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் 7.54 மணியளவில் அவரது மனைவியுடன் வந்தார். அவரும் பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வணக்கம் தெரிவித்தார். காலை 7.58 மணியளவில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அருகே கவர்னர் ஆர்.என். ரவி வந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

    பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று அமர்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மேடைக்கு வந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பை ஏற்றார். அதனைத்தொடர்ந்து 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு அவர் மேடைக்கு சென்று அமர்ந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரதீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

    கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கினார். இவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

    சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    • புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
    • மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.

    இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

    கடலூர்:

    பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
    • மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் மாடசாமி கலைவாணி தொண்டு அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் மருதம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருதம் தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

    • ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    76-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் நிலையங்களில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.பொதுமக்கள் ஆர்வமுடன் தபால் நிலையத்தில் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் பல்லடம்சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது.
    • இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரத்தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசியக் கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது. இதன் விலை ரூ.25 மட்டுமே ஆகும். இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டுமே செலுத்தி, தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து சுதந்திரதின அமுதப்பெரு விழாவினை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
    • இணையத்தில் பதிந்தால் வீட்டுக்கே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்கு தயராகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் தேசியக்கொடியின் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை களைகட்டி உள்ளது.

    கோவையில் ஆர்.எஸ்.புரம், கூட்ஷெட் ரோடு ஆகிய பகுதிகளில் தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மாவட்டம் முழுவதும் 80 துணை அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    கோவையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை நேற்று தொடங்கியது.

    அங்கு ஒரு கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எனவே அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு திரண்டு வந்து தேசியக்கொடிகளை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கோவை அஞ்சலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் விற்பனையை தொடங்கி உள்ளோம்.பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும் தேசியக்கொடி வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதியை பயன்படுத்தலாம்.

    இதற்காக அவர்கள் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்களே நேரில் வந்து தேசியக்கொடியை ஒப்படைப்பர்.

    கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் விற்கப்படும் தேசியக்கொடிக்கு மாவட்ட அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே நடப்பாண்டு சுமார் 40 ஆயிரம் தேசியக்கொடிகளை விற்பனை செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
    • தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படவுள்ளது.

    இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஏ.விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதையடுத்து, அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் திருப்பூா் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் ஒரிரு நாள்களில் தேசியக் கொடி விற்பனைக்கு வரவுள்ளது.

    தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் அஞ்சல் ஊழியா்கள் மூலமாக வீடுகளுக்கே தேசியக் கொடி விநியோகம் செய்யப்படும். மேலும், அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் ரூ.25 செலுத்தி தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம்.

    அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால் திருப்பூா் கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தாராபுரம் தலைமை அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 24 மணி நேரமும் பறந்த வண்ணம் இருக்கும்.
    • சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்தது.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களின் முன் பிரமாண்ட அளவிலான தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடியானது 24 மணி நேரமும் பறந்த வண்ணம் இருக்கும். இதுபோன்ற தேசியக்கொடியானது திருப்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த தேசியக்கொடியானது அருகில் உள்ள உயர்மின்கோபுர விளக்கில் பட்டு சேதமடைந்து வந்தது. இதையடுத்து கொடியின் நீள, அகலம் சற்று குறைககப்பட்டதால் கொடி கிழிவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்தது.

    குறிப்பாக கொடி ஆங்காங்கே கந்தல், கந்தலாக கிழிந்தது. இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் தேசியக்கொடி பறந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலை கொள்ள செய்தது. இது குறித்து மாைலமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தினர் கிழிந்த நிலையில் இருந்த கொடியை அப்புறப்படுத்தி, புதிய தேசியக்கொடியை ஏற்றினர். அழுக்கடைந்தும், கிழிந்தும் காணப்பட்ட கொடி மாற்றப்பட்டு,புத்தொளி வீசும் புதிய கொடி பறப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • செனாப் பள்ளத்தாக்கு மண்டலத்தில் ஏற்றப்படும் 2-வது உயரமான தேசியக்கொடி இதுவாகும்.
    • ராணுவத்தில் சிறந்த பங்களிப்பு செய்த வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    டோடா :

    இந்திய ராணுவம் நேற்று ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியது. பட்டொளி வீசி பறந்த தேசிய கொடிக்கு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

    ராணுவத்தின் டெல்டா படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜய் குமார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் 9-வது பிரிவு தளபதியுடன், தோடா விளையாட்டு அரங்கில் இந்த உயரமான தேசிய கொடியை ஏற்றினார்.

    "நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உரிய அஞ்சலியாக இது அமைந்துள்ளது. பள்ளத்தாக்குப் பகுதியில் பறக்கும் உயர்ந்த தேசியக்கொடி தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போதும் தேசபக்தியை நெஞ்சில் விதைக்கும்" என்று அவர் கூறினார்.

    செனாப் பள்ளத்தாக்கு மண்டலத்தில் ஏற்றப்படும் 2-வது உயரமான தேசியக்கொடி இதுவாகும். இதற்கு முன்னர் அருகிலுள்ள பகுதியான கிஸ்ட்வார் நகரத்தில் 100 அடி உயர தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமிருந்தது ஒடுக்கப்பட்டு, அங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் தேசத்திற்காக உயிர்நீத்த ராணுவவீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர். ராணுவத்தில் சிறந்த பங்களிப்பு செய்த வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளூர் மக்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×