search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 percent"

    • உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது.
    • நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) பிராண்ட்ஸ்- சோா்சிங் லீடா்ஸ் (பிஎஸ்எல்) நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    இதில், ஏஇபிசியின் தென்னிந்திய பொறுப்பாளரும், பியோ தலைவருமான ஏ.சக்திவேல் பேசியதாவது:-

    உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்கின்றது. உலகிலேயே 100 சதவீதம் சுற்றுச்சூழல் மாசடையாமல் கழிவுநீா் ஜீரோ டிகிரி முறையில் சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே 10 ஆண்டுகளாக நடக்கிறது. நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    அதில் 96 சதவீதம் மறு பயன்பாடு, 4 சதவிகிதம் ஆவியாக்கப்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா்.

    இதைத்தொடா்ந்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-

    ஏ.இ.பி.சி., மற்றும் பி.எஸ்.எல்., இணைந்து டெல்லி, பெங்களூரு, திருப்பூர், மும்பை, குர்ஹாம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மே 5 முதல் 27-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    புவி மாசுபடாத ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் நகரை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நோக்கமே 2025-26ம் ஆண்டுக்குள் திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அனைத்தும் பசுமை ஆடைகளாக தயாரிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்.

    திருப்பூர் மாநகரில் மொத்தமாக சூரிய ஒளி மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி மூலம் 1,650 மெகாவாட் மின் உற்பத்தியை தயார்படுத்தி கொண்டுள்ளோம். இதில், மாவட்ட அளவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 250 மெகாவாட் மின் சக்தியே போதுமானது. மீதமுள்ள 650 மெகாவாட்டை நகர பயன்பாட்டிற்காக அளித்து வருகிறோம்.

    உலக அளவில் உள்ள வர்த்தகர்களுக்கு திருப்பூரின் பசுமை திட்டம் குறித்து முழுமையாக தெரிவதில்லை. அதனை முன்னிறுத்தி பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் தனித்துவ தன்மையை காட்டுவதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

    கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    அரியலூர்:

    நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×