search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்

    மயிலாடுதுறை:

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,937 மாணவர்களும், 12,673 மாணவிகளும் என மொத்தம் 25,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,598 மாணவர்களும், 12,066 மாணவிகளும் என மொத்தம் 23,664 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    89.65 சதவீத மாணவர்களும், 95.221 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.40 ஆகும்.

    மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 94.4 சதவீதமும், 2018-ம் ஆண்டு 91.60 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9,470 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் 8,188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.46 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SSLC #SSLCResult

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேனி மாவட்டத்தில் 8,104 மாணவர்களும், 7,754 மாணவிகளும் என மொத்தம் 15,858 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,404 மாணவர்கள், 7,424 மாணவிகள் என மொத்தம் 14,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.36 சதவீதமும், மாணவிகள் 95.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சவீதம் 93.50 ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தேனி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 97.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 97.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

    மாநில அளவில் தேனி மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் தேனி மாவட்டத்தில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 5,311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.91 சதவீதம் ஆகும். #SSLC #SSLCResult

    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறுகையில்,  ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்த தனியார் வங்கியை கண்டித்து தஞ்சை பால் வியாபாரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் பால்பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதனை வீடு வீடாக சென்று சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் பால் வினியோகம் செய்து அந்த பணத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்த பணம் ரூ.1 லட்சத்தை கட்டுவதற்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். இதில் ரூ.99 ஆயிரத்திற்கு நோட்டுகளாகவும் மீதி ரூ.1000-க்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்துள்ளார்.

    அப்போது அதனை வாங்கிய வங்கி காசாளர் ரூபாய் நோட்டுகளை மற்றும் பெற்றுக்கொண்டு ரூ.10 நாணயங்களை முத்துகிருஷ்ணனிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் ஏன் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்குறீர்கள்? என கேட்டார். அதற்கு ரூ.10 நாணயம் செல்லாது என வங்கி காசாளர் பதில் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து வங்கி முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பால் வியாபாரிக்கு ஆதரவாக அங்கு அருகே உள்ள சில வியாபாரிகளும் குரல் கொடுத்தனர்.

    இதனால் வங்கி முன்பு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பால் வியாபாரியிடம் வங்கி காசாளர் ரூ.10 நாணயங்களை வாரத்திற்கு ஒரு முறைதான் வாங்குவோம் என கூறியுள்ளார். எங்களிடம் ரூ.10 நாணயங்களை எண்ணுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.

    அதனை கேட்டு ஆத்திரம் அடைந்த முத்து கிருஷ்ணன், மற்ற வியாபாரிகளும் உங்களுடைய வேலையே பணத்தை எண்ணி வாங்குவதற்குதான். எந்திரத்தில் பணம் கட்ட தெரியாத எங்களை போன்ற வியாபாரிகள் சிலர் மட்டுமே வங்கிக்கு வந்து பணம் கட்டுகிறோம். இதனை கூட வாங்க உங்களால் முடியவில்லையா? என கடிந்து கொண்டனர்.

    மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் புகார் அனுப்புவோம் என்று வியாபாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

    பால் வியாபாரி வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். #ChinaFire
    பெய்ஜிங்:

    சீனாவின் ஷாங்காங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் சிக்கினர்.

    தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற மூன்று தீவிபத்துகளில் சிக்கி 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #ChinaFire
    நாமக்கல் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 16).

    இவர் நாமக்கல் கோட்டை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்த பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மணிகண்டன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைஉறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் மணிகண்டனை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் மணிகண்டன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதனால் சோகத்தில் மூழ்கிய ராஜ்குமார்- செந்தாமரை மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.

    அதில், அவரது பெயர் மற்றும் முகவரி, செல்போன் எண், புகைப்படத்தை அனைவருக்கும் பகிரவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது.

    இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மாயமான மணிகண்டன் இன்று காலை பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றாரா? அப்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் 10ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் காப்பியடிக்க உதவிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். #ExamIrregularities
    பெலகாவி:

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அழகனூரில் உள்ள எச்.வி.எச். பள்ளியில், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், கணித பாட தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்து காப்பியடிக்க உதவி உள்ளனர்.

    ஆசிரியர்களே விடைகள் எழுதுவதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் எச்.வி.எச்.  பள்ளியின் துணை முதல்வர் மகதும், ஆசிரியர்கள் கபாசி, பாட்டீல், பாலையா ஆகியோர் விடைகளை எழுதி மாணவர்களுக்கு வினியோகித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர். #ExamIrregularities
    இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியதுடன் 25 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #T10Cricket
    துபாயில் டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் போட்டி ஒன்றில் இங்கிலாந்து கவுண்ட்டி அணிகளான சர்ரே - லாங்காஷைர் அணிகள் மோதின.

    சர்ரே அணி பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில் ஜேக்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொழில்முறை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது வில் ஜேக்ஸ் அதை முறியடித்துள்ளார்.
    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. #CBSE #SSLC #Marksheet
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

    இருப்பினும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு வழக்கம்போல் தனித்தனியாக 2 சான்றிதழ்கள் வழங்கப்படும். #CBSE #SSLC #Marksheet 
    ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். #Afghanfloods #Heratfloods
    காபுல்:

    34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.

    இதனால் இந்த மாகாணத்தில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன. அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர். #Afghanfloods #Heratfloods
    குஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை கண்டெடுத்த கடை ஊழியர் அந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். #10lakhs

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உம்ரா பகுதியில் ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருபவர் திலீப்.

    நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சென்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு கடைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வழியில் ரோட்டோரத்தில் பெரிய பை ஒன்று கிடப்பதை கண்டார். அந்த பையை எடுத்து திறந்து பார்த்த திலீப்புக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அந்த பைக்குள் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    மொத்தம் 10 லட்சம் ரூபாய் அந்த பைக்குள் இருந்தது. அந்த பணப் பையை யாரோ தவற விட்டு இருக்கிறார்கள் என்பதை திலீப் உணர்ந்து கொண்டார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பது அவருக்கு உடனடியாக புரியவில்லை.

    பணத்தை தவற விட்டவர் தேடி வரக்கூடும் என்ற எண்ணத்தில் சிறிது நேரம் அவர் அந்த பகுதியில் காத்து நின்றார். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து பணப்பையுடன் அவர் தனது கடைக்கு சென்றார்.

    அங்கிருந்த ஒரு ஊழியரிடம் அவர் ரோட்டு ஓரத்தில் கிடந்த பணப்பை பற்றி கூறினார். அதற்கு அந்த ஊழியர் 10 லட்சம் ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று யோசனை தெரிவித்தார்.

    அதை ஏற்க மறுத்த திலீப், “உழைத்து சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும்” என்று கூறி விட்டு 10 லட்சம் ரூபாயை போலீஸ் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பணக்காரர் ஒருவர் அந்த பணத்தை தவற விட்டு இருப்பது தெரிந்தது. அவரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவரை வரவழைத்தனர்.

    அவரிடம் திலீப் 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட நபர் அது திரும்ப கிடைத்ததை நம்ப முடியாதபடி மகிழ்ச்சி அடைந்தார். அதோடு அவர் திலீப்பின் நேர்மையை பாராட்டி தனது பணப்பையில் இருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்து கொடுத்தார்.

    இதற்கிடையே உம்ரா பகுதி நகைக்கடைக்காரர் ஒருவரும் திலீப் நேர்மையை பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்தார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு திலீப்பின் நேர்மைக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்து இருப்பதாக போலீசார் பாராட்டி உள்ளனர். #10lakhs

    ×